போஒர் கிழவோன் பழையன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போஒர் கிழவோன் பழையன் சங்க காலத்திய சோழநாட்டுச் சிற்றரசன். இவன் ஆண்ட ஊர் சங்ககாலத்தில் போர்வை, போஒர், திருப்போர்ப்புறம் என்னும் பெயர்களால் குறிப்பிடப்பட்டு வந்தது. இப்போது அவ்வூர் குழித்தலைக்கும் கருவூருக்கும் இடையில் உள்ள பெட்டவாய்த்தலை என்னும் ஊர் ஆகும்.

இவன் வில்லாண்மையில் சிறப்புற்று விளங்கினான்.

இவனது தலைநகருக்கு அருகிலிருந்த கட்டூர் என்னுமிடத்தில் நடந்த போரில் ஏழுபேர் சேர்ந்து தாக்கி இவனைக் கொன்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=போஒர்_கிழவோன்_பழையன்&oldid=1176525" இலிருந்து மீள்விக்கப்பட்டது