திருக்குடந்தைப் புராணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கும்பகோணத்தின் தல வரலாற்றினைப் பற்றி பல புராணங்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது. திருக்குடந்தைப் புராணம் ஆகும்.

தல புராணங்கள்[தொகு]

குடந்தையைப் பற்றி வந்துள்ள தலபுராணங்கள் கீழ்க்கண்டவாறு அமையும். [1]

  • கும்பகோணத் தல புராணம் - 1406 பாடல்கள் - ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
  • கும்பகோணப் புராணம் - 1118 பாடல்கள் -ஆசிரியர் அகோர தேவர்
  • கும்பகோணப் புராணம் - ஆசிரியர் ஒப்பிலா மணிப்புலவர்
  • திருக்குடந்தைப் புராணம் - 70 படலங்கள், 2384 பாடல்கள் - ஆசிரியர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை

உருவாக்கம்[தொகு]

1865இல் கும்பகோணத்தில் தாசில்தாராக இருந்த சிவகுருநாதபிள்ளை மற்றும் பல பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை கும்பகோணம் பேட்டைத்தெருவிலுள்ள திருவாவடுதுறை மடத்தில் தங்கியிருந்து இப்புராணத்தை இயற்றினார். [1]

சிறப்பு[தொகு]

1866ஆம் ஆண்டு அச்சிடப்பெற்ற இப்புராணம் இலக்கியச் சிறப்புகள் கொண்டதாகும். இத்தலத்தின் சிறப்புகள் முழுவதையும் இப்புராணத்தில் காணலாம். [1]

ஆதிகும்பேசர்[தொகு]

ஆதிகும்பேசர் பற்றி இப்புராணத்தில் காணும் பாடல் பின்வருமாறு அமையும். [2]

"பூமேய வாரணனும் நாரணனும்
வாரணனும் பொற்பூ மாலைத்
தேமேய விண்ணவரும் நண்ணவரும்
பசுமுலதாஞ் சிறப்பு நல்கி
மாமேய குடமூக்கி னிடமூக்கின்
பார்கருணை வடிவின் மேய
பாமேய புகாதி கும்பேசர்
தாமரைத்தாள் பணிந்து வாழ்வாம்."

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 முனைவர் வே.இரா.மாதவன், திருக்குடந்தைப் புராணம், மகாமகம் 2004 சிறப்பு மலர்
  2. கும்பகோணம் அருள்மிகு ஆதிகும்பேசுவரர் திருக்கோயில் மகாகும்பாபிஷேகம், தெய்வத்திருமலர், 1985