ஜீவா ஜீவரத்தினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜீவா ஜீவரத்தினம் (நவம்பர் 23, 1939 - அக்டோபர் 20, 1997) ஈழத்துக் கவிஞரும், எழுத்தாளரும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்கேயுள்ள துறைநீலாவணையில் பிறந்தவர். ஜோர்ஜ் ஜீவரத்தினம் என்பது இவரது இயற்பெயர். மலையகத்தில் பதுளை போன்ற பல இடங்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர் ஒரு விளையாட்டு வீரரும் ஆவார்.[1]

50களின் பிற்பகுதியில் கவிதைகள் எழுதத் தொடங்கினார். வாழும் கவிதை என்னும் ஒரு கவிதை நூல் 60களின் பிற்பகுதியில் வெளிவந்தது. பா நாடகங்கள், வானொலி, மற்றும் மேடைக் கவியரங்கக் கவிதைகள் பலவற்றை இவர் எழுதியுள்ளார்.[1]

விருதுகள்[தொகு]

  • மானம் என்ற பா நாடகம் சாகித்திய மண்டலம் நடத்திய நாடகப் போட்டியில் பரிசு பெற்றது.[1]
  • மலையுதிர் மணிகள் என்னும் ஏசுவின் மலைப்பிரசங்க வெண்பாக்கள் சர்வதேச ஆசிரியர் நாளை ஒட்டி கல்வி அமைச்சு 1996 இல் நடத்திய கவிதைப் போட்டியில் ரூ.10,000 முதல் பரிசு பெற்றது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 ஜீவா ஜீவரெத்தினம். வீரகேசரி. 07 சூன் 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜீவா_ஜீவரத்தினம்&oldid=3035319" இலிருந்து மீள்விக்கப்பட்டது