ஜீவா ஜீவரத்தினம்
ஜீவா ஜீவரத்தினம் (நவம்பர் 23, 1939 - அக்டோபர் 20, 1997) ஈழத்துக் கவிஞரும், எழுத்தாளரும் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்கேயுள்ள துறைநீலாவணையில் பிறந்தவர். ஜோர்ஜ் ஜீவரத்தினம் என்பது இவரது இயற்பெயர். மலையகத்தில் பதுளை போன்ற பல இடங்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர் ஒரு விளையாட்டு வீரரும் ஆவார்.[1]
50களின் பிற்பகுதியில் கவிதைகள் எழுதத் தொடங்கினார். வாழும் கவிதை என்னும் ஒரு கவிதை நூல் 60களின் பிற்பகுதியில் வெளிவந்தது. பா நாடகங்கள், வானொலி, மற்றும் மேடைக் கவியரங்கக் கவிதைகள் பலவற்றை இவர் எழுதியுள்ளார்.[1]
விருதுகள்[தொகு]
- மானம் என்ற பா நாடகம் சாகித்திய மண்டலம் நடத்திய நாடகப் போட்டியில் பரிசு பெற்றது.[1]
- மலையுதிர் மணிகள் என்னும் ஏசுவின் மலைப்பிரசங்க வெண்பாக்கள் சர்வதேச ஆசிரியர் நாளை ஒட்டி கல்வி அமைச்சு 1996 இல் நடத்திய கவிதைப் போட்டியில் ரூ.10,000 முதல் பரிசு பெற்றது.[1]