குடநாகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குஞ்சநாகன்
அனுராதபுர யுக அரசர்
ஆட்சி195 - 196
முன்னிருந்தவர்குச்சநாகன்
முதலாம் சிறிநாகன்
அரச குலம்முதலாம் லம்பகர்ண வம்சம்
தந்தைகனித்த திச்சன்

குடநாகன், குட்டநாகன் அல்லது குஞ்சநாகன் எனப் பலவாறாக அறியப்பட்டவன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் அனுராதபுரத்தில் இருந்து இலங்கையை ஆண்ட மன்னன். இவன் ஒரு ஆண்டு மட்டுமே ஆட்சி செய்ததாக மகாவம்சம் கூறுகிறது.[1] ஆனாலும், இவனது ஆட்சிக்காலம் கிபி 181-182 என்றும்,[2] கிபி 193-195 என்றும்,[3] கிபி 186-187 என்றும்,[4] பலவாறாகக் கூறப்படுகிறது. இவனது தமையனான குச்சநாகன் என்பவனைக் கொன்றுவிட்டு இவன் அநுராதபுரத்தின் ஆட்சியில் அமர்ந்தான்.

நாட்டின் படைத் தலைவனாக இருந்த குடநாகனின் மனைவியின் சகோதரன் சிரிநாகன் என்பவன், அரசனுக்கு எதிராகத் திரும்பித் தனக்கு ஆதரவான வலுவான படையுடன் வந்து அநுராதபுரத்தைக் கைப்பற்றிக் குடாநாகனை அகற்றிவிட்டுத் தானே அரசனானான்.

குறிப்புகள்[தொகு]

  1. Wijesinha, L. C. (translator), Mahavansa Part I, Asian Educational Services, New Delhi, 1996. p. 144.
  2. The Mahavamsa, Kings of Sri Lanka 131AD to 238AD
  3. LIST OF THE SOVEREIGNS OF LANKA
  4. Sri Lanka Genealogy Website – HISTORY, Kings & Rulers of Sri Lanka

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

குடநாகன்
பிறப்பு: ? ? இறப்பு: ? ?
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர்
குச்சநாகன்
அனுராதபுர அரசன்
195–196
பின்னர்
முதலாம் சிறிநாகன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடநாகன்&oldid=1837809" இலிருந்து மீள்விக்கப்பட்டது