இஸ்ரயேலே, செவிகொடு!

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசுரேலிய சட்டமன்றத்தில் இஸ்ரயேலே, செவிகொடு!.

இஸ்ரயேலே, செவிகொடு! (எபிரேயம்: שְׁמַע יִשְׂרָאֵל ஷேமா யிஸ்ராயல்; ஆங்கிலம்: "Hear, [O] Israel") எனும் தோராவில் காணப்படும் இவ்விரு சொற்களும் யூதர்களின் காலை மற்றும் மாலை மன்றாட்டுகளில் மிக முக்கியமானதாகும். இணைச்சட்டம் 6:4 இல் இது: "இஸ்ரயேலே, செவிகொடு! நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர்." என வருகின்றது[1]

யூத சமயத்தில் இது முக்கியமானதான செபமாகக்கருதப்படுகின்றது. இது ஒரு நாளில் இரு முறை மனப்பாடமாக ஒப்புவிக்க கட்டளையாகக் காணப்படுகிறது. யூதர்கள் இதை தமது மன்றாட்டுகளின் இறுதி வரியாக பயன்படுத்துவதை மரபாகக் கொண்டுள்ளனர். பெற்றோர் தங்கள் பிள்ளைகள் உறங்கச் செல்லும் முன் இதனை சொல்லப் பயிற்றுவிக்கிறார்கள்.

உள்ளடக்கம்[தொகு]

தோராவில் "இஸ்ரயேலே, செவிகொடு!"

இதிலுள்ள முதல் இயல்பான சொற்களாவன: :שְׁמַע יִשְׂרָאֵל יְהוָה אֱלֹהֵינוּ יְהוָה אֶחָדஷேமா யிஸ்ராயல் யஃவா எலேகினு யஃவா எஃகாட்

யாவே என்பது யூதத்தில் கடவுளைக் குறிக்க பயன்படுத்தும் நேரடி சொல். இதனைப் பொதுவாகப் பயன்படுத்துதல் கூடாது என்பதால், யாவே எனும் சொல்லுக்குப் பதிலாகக் கடவுளைக் குறிக்கப் பயன்படும் இன்னுமொரு சொல்லான அதோனாய் பயன்படுத்தி பின்வருமாறு மாற்றப்பட்டுள்ளது.

"ஷேமா யிஸ்ராயல் அதோனாய் எலேகினு அதோனாய் எஃகாட்" - இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கடவுள் ஒருவரே கடவுள்.

பின்வருமாறு இதற்கு நேரடியான பொருள் கொள்ளலாம்:

ஷேமாகேள், அல்லது செவிகொடு
யிஸ்ராயல் — இஸ்ரயேலே, இஸ்ரயேல் மக்கள் எனும் பொருள் கொண்டது
அதோனாய் — ஆண்டவர்
எலேகினு — நம்முடைய கடவுள்
எஃகாட் — முதன்மையான எண் ஒன்று

குறிப்புகள்[தொகு]

  1. இணைச்சட்டம் 6:4

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இஸ்ரயேலே,_செவிகொடு!&oldid=3766043" இலிருந்து மீள்விக்கப்பட்டது