நைமித்திக கர்மம்
நைமித்திக கர்மம் எனில் ஒரு நோக்கத்துடன் கூடிய அல்லது காரணத்துடன் கூடிய செயலே நைமித்திக கர்மம் ஆகும். ஏதாவது ஒரு தனிப்பட்ட நோக்கம் அல்லது காரணத்தினால் செய்யத் தக்க கர்மம் நைமித்திக கர்மம் ஆகும். எடுத்துக்காட்டு: வேதத்தில் கூறியவாறு குழந்தை பிறந்தவுடன் செய்ய ஜாதேஷ்டி யாகம் அல்லது ஜாதகர்மா மற்றும் உபநயனம் போன்ற கர்மங்கள் நைமித்திக கர்மங்கள் ஆகும். மேலும் அமாவாசை, பௌர்ணமிகளில் செய்ய வேண்டிய தர்சபூர்ணமாச யாகங்கள், சிரார்த்தம் போன்ற கர்மங்கள் நைமித்திக கர்மங்களின் வகைகள் ஆகும்.
உதவி நூல்[தொகு]
- வேதாந்த சாரம், சுலோகம் 10 , நூலாசிரியர், சதானந்தர், வெளியீடு, ஸ்ரீஇராமகிருஷ்ண மடம், சென்னை.
- ஆதிசங்கரரின் வேதாந்த சூத்திரங்கள், தொகுதி 1 [1]
- ஆதிசங்கரரின் வேதாந்த சூத்திரங்கள், தொகுதி 2 [2]