மகாராட்டிரதேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மகாராட்டிரதேசம் கொங்கணதேசம் முதல் மேற்கு கடற்கரை ஓரமாக கோகர்ணம் வரையிலும், யவனதேசத்திற்கு மேற்கிலும், தண்டகாரண்யம்,பஞ்சவடி, இவைகளின் தென்மேற்கிலும் பரவி நடுவில் சதுரமான பூமியாய் இருந்த தேசம்.[1]

இருப்பிடம்[தொகு]

ஆந்திரதேசம் போலவே இத்தேசத்தின் பூமி பாதி நல்ல பூமியாகவும், பாதி பூமி மண்ணும், கல்லும், மணலும், மேடு, பள்ளங்கள் இல்லாமல் சம்மாகவே இருக்கும். இந்த தேசத்தில் வருடத்தில் 8 மாதம் மழை பெய்து கொண்டே இருக்கும்.[2]

மலை, காடு, விலங்குகள்[தொகு]

இந்த தேசத்தின் வடக்கில் பஞ்சவடியும்ருசுயமுகமலையும், மால்யவான் மலையும் அதன் மலைத் தொடர்களும், சிறு, சிறு குன்றுகளும், சிறு, சிறு காடுகளும் செழிப்பான நல்ல பூமியும் இருக்கும். இத்தேசத்தில் புன்செய் பயிர்களே அதிகமிருக்கும்.

நதிகள்[தொகு]

மகாராட்டிரதேசத்தின்வடபாகம் முழுவதும் யவனதேசத்தின் தெற்குபாகத்தில் மால்யவான் மலையிலிருந்து கிழக்கு நோக்கி ஓடிவரும் துங்கவேணா நதி மகாராட்டிரதேசத்தை செழிக்க வைக்கின்றது.[3]

சிறப்பு[தொகு]

இந்த மகாராட்டிரதேசத்தில் பஞ்சவடி, கிஷ்கிந்தை, மகாபரபுரம், மகாபலேசுவரம், பரதிஷ்டானம் போன்ற நகரங்கள் இராமாயண காலத்தில் சிறப்புற்று இருந்தன.

கருவி நூல்[தொகு]

சான்றடைவு[தொகு]

  1. "புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras
  2. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 260 -
  3. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள்]] - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 261 -
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாராட்டிரதேசம்&oldid=2076866" இலிருந்து மீள்விக்கப்பட்டது