உத்கலதேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உத்கலதேசம் சித்ரகூட மலைக்கு தெற்கிலும் ஹேஹயதேசத்திற்கு கிழக்கிலும், மகோத நதியின் கரை முதல் வைதரணீ நதி உற்பத்தியாகும் இடம் வரையிலும் பரவி இருந்த தேசம்.[1]

இருப்பிடம்[தொகு]

இந்த தேசம் கோசலதேசத்திற்கு சமமாய் செழிப்பான தேசமாகும். மகோத நதியின் தென்பாகமெல்லாம் மேகலதேசம் என்றும், வடக்கில் வைதரணீ நதி அருகே உள்ள பூமியெல்லாம் பல்லாடதேசம் என்றும் இரு உபதேசங்களை உடையதாகிறது.[2]

மலை, காடு, விலங்குகள்[தொகு]

இந்த தேசத்தின் மேற்கில் ஹேஹயதேசத்திற்கு அருகில் கந்தர்வகிரி என்ற மலையும், அடர்ந்த காடுகளும், நிறைந்து இருக்கிறது. இத்தேசத்தில் சிறு, சிறு குன்றுகளும், சிறு, சிறு காடுகளும் உண்டு.

நதிகள்[தொகு]

இந்த உத்கலதேசத்தின் மேற்குபாகத்தில் மகோத நதி ஓடி இந்த தேசத்தை செழிக்க வைக்கின்றது. மகோத நதி இந்த உத்கலதேசத்தை கடந்து கிழக்குக் கடலில் வீழ்கிறது.

கருவி நூல்[தொகு]

சான்றடைவு[தொகு]

  1. "புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras
  2. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 207 -
"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்கலதேசம்&oldid=2076858" இலிருந்து மீள்விக்கப்பட்டது