ஆபீரதேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆபீரதேசம் சிந்துதேசத்தின் கிழக்கிலும், குந்தி, குந்தல தேசங்களுக்கு நேர்மேற்கிலும், திரிகூட மலைக்கு வடக்கிலும்,அகன்று பரவி இருந்த தேசம்.[1]

இருப்பிடம்[தொகு]

இந்த தேசத்தின் மேற்குப்பாகத்தில் கொஞ்ச பூமிதான் விவசாயத்திற்கு ஏற்ற பூமி, சால்வதேசம் வரை மணல்கலந்த பூமியும், மற்ற பாகங்களில் குன்றுகளும், கற்பாறை கலந்தபூமியாய் இருக்கும்.[2]

மலை, காடு, விலங்குகள்[தொகு]

இந்த தேசத்தின் தென்கிழக்கிலும், தெற்கிலும் ஆதர்சாவளி (ஆரவல்லி) என்னும் பெரிய மலைத்தொடர் இந்த தேசம் முழுதும் பரவியுள்ளது. இதை ஒட்டி பெரிய பாழைவனமும் சிறிய காடுகளும், அவைகளில் கொடிய விலங்குகள் அதிகமாக இருக்கும்.

நதிகள்[தொகு]

இந்த தேசத்தின் மேற்கு எல்லையில் ஓடும் சிந்து நதியே முக்கிய நதியாகும். ஆதர்சாவளி (ஆரவல்லி) உருவாகும் சிறு,சிறு ஓடைகள் சிந்துநதியுடன் இணைகிறது. சில நதிகள் கிழக்குமுகமாய் ஓடி சர்மண்வதீ நதியுடன் இணைகிறது.

கருவி நூல்[தொகு]

சான்றடைவு[தொகு]

  1. "புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras
  2. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 165 -
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆபீரதேசம்&oldid=2076838" இலிருந்து மீள்விக்கப்பட்டது