நட்டுவாங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரதநாட்டிய கச்சேரியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது நட்டுவாங்கம். இது இரண்டு வட்ட வடிவிலான வெண்கல தட்டு கொண்டு அமைக்கப்படும். இதற்கு மரக்கட்டைகளை பயன்படுத்தும் போது இது தட்டவாடி அல்லது தாளவடி எனப்படும்.

நட்டுவனார்[தொகு]

கைத் தாளம் அல்லது தாள இசைக்கருவி கொண்டு தாளம் போடும் ஒருவர் நட்டுவனார் என அழைக்கப்படுகிறார்.[1] பொதுவாக இவரே குருவாக இருப்பார். நட்டுவனார் தாள ஜாதியுடன் இசையுடன் இசைந்து இருப்பது பரதநாட்டிய கச்சேரிக்கு இனிமை சேர்க்கும்.

முக்கியமானவர்கள்[தொகு]

நட்டுவனார்களில் மிக முதன்மையானவர்களான தஞ்சை நால்வர் எனப்படுபவர்கள்
தஞ்சை நால்வருக்குப் பின் புகழ்பெற்ற அறுவர்
  • பத்தநல்லூர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
  • காட்டுமன்னார்கோவில் முத்துகுமாரசாமி பிள்ளை
  • தஞ்சாவூர் கிட்டப்பா பிள்ளை
  • வழுவூர் பி. இராமையா பிள்ளை
  • வைத்தீசுவரன் கோயில் முத்துசாமி பிள்ளை
  • திருவிடைமருதூர் மகாலிங்கம் பிள்ளை

கே. ஜே. சரசா என்பவர் முதல் பெண் நட்டுவனார் ஆவார்[2]. இவர் வழுவூர் ராமைய்யா பிள்ளையின் மாணாக்கர் ஆவார்.

  • தஞ்சாவூர் ஹேரம்பநாதன்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நட்டுவாங்கம்&oldid=3241898" இலிருந்து மீள்விக்கப்பட்டது