பசுமை நகர்ப்புறவியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பசுமை நகர்ப்புறவியம் (green urbanism) என்பது, மனிதருக்கும், சூழலுக்கும் நன்மை பயக்கக்கூடிய சமூகங்களை உருவாக்கும் ஒரு நடைமுறை ஆகும். இது கூடிய தாங்குநிலையோடு கூடிய இடங்களையும், சமூகங்களையும், வாழ்க்கை முறைகளையும் எற்படுத்துவதற்கான ஒரு முயற்சி. பசுமை நகர்ப்புறவியம் உலக வளங்களைக் குறைவாகப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. பசுமை நகர்ப்புறவியம் பல்துறை சார்ந்தது. இது, கட்டிடக் கலைஞர்கள், நகர வடிவமைப்பாளர்கள் ஆகியோருடன், நிலத்தோற்றக் கலைஞர், பொறியாளர்கள், நகர்ப்புற வடிவமைப்பாளர், சூழலியலாளர், போக்குவரத்துத் திட்டமிடலாளர், இயற்பியலாளர், சமூகவியலாளர், பொருளியலாளர் போன்றோரின் கூட்டு முயற்சியை உள்ளடக்கியது.

நகரமயமாதலும் சுற்றுச் சூழல் அழிவும்[தொகு]

நகரமயமாதலும், சுற்றுச் சூழல் அழிவும் எப்பொழுதும் ஒன்றாகவே இடம் பெறுகின்றன. 1989ல் ஒடும் (Odum) என்பவர் நகரங்கள் உணவு உற்பத்தியில் ஈடுபதுவது இல்லை என்பதால் அவை இயற்கை மற்றும் செய்கை பண்ணப்படும் சூழல்களில் தங்கியுள்ள ஒட்டுண்ணிகள் என வர்ணித்தார். இவ்வாறான இசைவற்ற தன்மையின் விளைவாக சூழலுக்குப் பேரழிவாக அமையக்கூடிய நிகழ்வுகள் இடம்பெறக்கூடும் என்றார் மயுர் (1990)

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பசுமை_நகர்ப்புறவியம்&oldid=1555533" இலிருந்து மீள்விக்கப்பட்டது