கே. ஆர். டேவிட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. ஆர். டேவிட்
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுகல்விப் பணிப்பாளர் , ஈழத்து எழுத்தாளர்

கே. ஆர். டேவிட் ஈழத்து எழுத்தாளர் ஆவார். புதினம், குறு­ம்புதினம், சிறுகதை, உருவகக்கதை, இலக்கிய, அரசியல் ஆய்வு எனப் பல்துறைகளில் எழுதி வருபவர்.

இலங்கை, சாவகச்சேரியைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட இவர் 1966 ஆம் ஆண்டு முதல் எழுதி வருகிறார். இவரது “எழு­தப்­ப­டாத வர­லாறு” என்ற சிறு­கதை தரம் எட்டு தமிழ்­மொ­ழியும் இலக்­கி­யமும் பாட­நூலில் இடம் ­பெற்­றுள்­ளது.[1] சாவகச்சேரி பிரதேச உதவிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

விருதுகள்[தொகு]

  • 2006–2008ஆம் ஆண்­டுகளுக்­கு­ரிய கன­க­ செந்தி கதா விரு­து
  • 2011 இல் கலா­பூ­ஷணம் விரு­து
  • 2013 இல் சிறந்த எழுத்­தா­ள­ருக்­கான இத­ழியல் விரு­து
  • "மண்ணின் முனகல்" என்ற சிறு­கதைத் தொகுதிக்கு 2013 ஆம் ஆண்டுக்கான நாமக்கல் கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை இலக்கிய விருது கிடைத்தது.[1][2]
  • 2013 இற்கான தமிழியல் விருது இவரது பாடுகள் என்ற சிறுகதைத் தொகுதிக்கு வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

தளத்தில்
கே. ஆர். டேவிட் எழுதிய
நூல்கள் உள்ளன.
  1. 1.0 1.1 நாமக்கல் சின்­னப்ப பாரதி இலக்­கிய விருது பெறும் இலங்கை எழுத்­தாளர், வீரகேசரி, அக்டோபர் 6, 2013
  2. சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது: என். சங்கரய்யா தேர்வு, தினமணி, 13 சூலை 2013
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஆர்._டேவிட்&oldid=3828669" இலிருந்து மீள்விக்கப்பட்டது