அருண்குமார் அரவிந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருண்குமார்
அரவிந்த்
பிறப்பு22 மே 1977 (1977-05-22) (அகவை 46)
திருவனந்தபுரம், கேரளம், இந்தியா
பணிதிரைப்பட இயக்குநர், படத்தொகுப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2003-நடப்பு
வாழ்க்கைத்
துணை
ஐசுவர்யா
பிள்ளைகள்அர்ஷா

அருண்குமார் அரவிந்த் (Arun Kumar Aravind- மே 22, 1977) மலையாளத் திரைப்பட இயக்குநர். மலையாளத்தில் புதியதலைமுறைப் படங்கள் என்று சொல்லப்படும் திரை அலையை உருவாக்கியவர்களில் ஒருவர்

திரைவாழ்க்கை[தொகு]

அருண்குமார் அடிப்படையில் ஒரு திரைப்படத் தொகுப்பாளர். 2004ல் வெளிவந்த வெட்டம் என்ற மலையாளப்படத்தை படத்தொகுப்பு செய்தார். அதன்பின் இயக்குநர் பிரியதர்சனின் பெரும்பாலான படங்களுக்கு படத்தொகுப்பாளராகப் பணியாற்றினார்[1].

2010 ல் சியாம் மேனன் எழுதிய காக்டெய்ல் என்ற சினிமாவை இயக்கியபடி இயக்குநராக அறிமுகமானார்[2][3]. அதன்பின் 2011 ல் முரளி கோபி திரைக்கதை எழுதிய ஈ அடுத்த காலத்து என்ற படமும் 2012ல் லெஃப்ட் ரைட் லெஃப்ட் என்ற அரசியல் விமர்சனப்படமும் இவரது இயக்கத்தில் வெளிவந்தன. ஜெயமோகன் திரைக்கதை எழுதிய ஒன் பை டூ என்ற படத்தை இப்போது இயக்கிக் கொண்டிருக்கிறார்

விருதுகள்[தொகு]

ஈ அடுத்த காலத்து படம் திருவனந்தபுரம் திரைவிழாவில் சிறந்த படம் மற்றும் திரைக்கதைக்கான விருதைப் பெற்றது. ஏஷியாநெட் விருது சிறந்த படத்தொகுப்புக்காக வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-02-03. பார்க்கப்பட்ட நாள் 2013-09-30.
  2. http://expressbuzz.com/entertainment/news/the-new-%E2%80%98cocktail%E2%80%99-party/297282.html[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-08-10. பார்க்கப்பட்ட நாள் 2013-09-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருண்குமார்_அரவிந்த்&oldid=3541707" இலிருந்து மீள்விக்கப்பட்டது