கொலவை ஏரி

ஆள்கூறுகள்: 12°42′29″N 12°42′29″E / 12.708°N 12.708°E / 12.708; 12.708
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(செங்கல்பட்டு கொலவை ஏரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கொலவை ஏரி
செங்கல்பட்டு கொலவை ஏரி
அமைவிடம்செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
ஆள்கூறுகள்12°42′29″N 12°42′29″E / 12.708°N 12.708°E / 12.708; 12.708


செங்கல்பட்டு கொலவை ஏரி (Kolavai Lake) செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு நகரில் அமைந்துள்ளது. இது இம்மாவட்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய ஏரியாகும்.[1] மதுராந்தகம் ஏரி முதலிடத்தில் இருக்கிறது. இந்த ஏரியானது செங்கல்பட்டு இரயில் நிலையத்தின் அருகிலேயே உள்ளது.

அமைவிடம்[தொகு]

கொலவை ஏரியின் காலை நேர ரம்மியமான தோற்றம்

இந்த ஏரியானது சென்னையில் இருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது. சென்னையிலிருந்து தென் தமிழகத்திற்கு செல்லும் அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் சாலையில் அருகிலேயே அமைந்துள்ளது. சென்னையிலிருந்து 1 மணி நேரத்தில் பேருந்தில் செல்லலாம்.

போக்குவரத்து[தொகு]

இதன் அருகில் பரனூர் மற்றும் செங்கல்பட்டு தொடர் வண்டி நிலையங்கள் அமைந்துள்ளன. இதன் வழியாக தென்தமிழகத்திற்கு செல்லும் தொடருந்துகள் அனைத்தும் இயக்கப்படுகின்றன.

நிலை[தொகு]

எப்போதும் நீர் நிறைந்து காணப்படும் இவ்வேரி தற்போது தண்ணீர் குறைந்து காணப்படுகிறது. இதற்குக் காரணம் ஏரியை ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டி வருவதாலும், பலர் இதன் அருகில் தொழிற்சாலைகளைக் கட்டுவதாலும் ஆகும்.

பயன்பாடு[தொகு]

சென்னையில் கோடைக் காலத்தில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்கவும், தொழிற்சாலைகளின் தேவையை பூர்த்தி செய்யவும் இந்த ஏரியிலிருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது.

சுற்றுலாத்தலம்[தொகு]

ஒரு சுற்றுலாத் தலமாக இந்த ஏரி விளங்குகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "செங்கல்பட்டு கொலவை ஏரி". தினமணி (செப்டம்பர் 24, 2013)

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொலவை_ஏரி&oldid=3613440" இலிருந்து மீள்விக்கப்பட்டது