தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை (TANHODA)
வகைNodal Agency
நிறுவுகை18.06.2004
தலைமையகம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
சேவை வழங்கும் பகுதிதமிழ்நாடு, இந்தியா
முதன்மை நபர்கள்சந்தீப் செக்செனா I.A.S
தொழில்துறைவேளாண்மை
சேவைகள்வேளாண்மை சந்தைப்படுத்துதல்
உரிமையாளர்கள்தமிழக அரசு
தாய் நிறுவனம்தமிழக அரசின் வேளாண்மைத் துறை
இணையத்தளம்www.tanhoda.gov.in

தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை (TANHODA-Tamil Nadu Horticulture Development Agency) ஆனது பெரிய அளவில் இந்திய அரசின் நிதிஉதவியுடன் வேளாண்மையை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு முகமை ஆகும்.[1]

வரலாறு[தொகு]

தமிழ்நாடு சங்கங்களின் பதிவுச் சட்டம் 1975 இன்படி, இம்முகமை ஒரு சங்கமாக பதிவு செய்யப்பட்டது.[2] இவ்வமைப்பு, அரசாணை எண்-91 (வேளாண்மை)-27.03.2000 இன் கீழ், நடுவண் அரசின் பெரியளவிலான நிதியுதவியுடன் 18.06.2004 அன்று வேளாண்மையின் மேம்பாட்டுக்காகத் தொடங்கப்பட்டது.

அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் அதிகாரங்கள்[தொகு]

தேசிய தோட்டக்கலை மிசன், சொட்டு நீர்ப்பாசனம், துல்லிய வேளாண்மை, தேசிய மூங்கில் மிசன் போன்ற திட்டங்களைச் செயல்படுத்தும் சிறப்பு அமைப்பாக இம்முகமை செயல்படுகிறது.[3]

செயல்கள்[தொகு]

  • விவசாயிகள் மற்றும் பணியாளர்களுக்குப் பயிற்சி.
  • உள்நாட்டு மற்றும் ஏற்றுமதிச் சந்தை புலனாய்வுப் பிரிவு (DEMIC) 2004ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
  • வெளியீடுகள்:

தமிழ்நாடு மாநில விவசாய விற்பனை வாரியம் (Tamil Nadu state agricultural Marketing Board) வேளாண்மையின் பல பிரிவுகளில் பயனுள்ள நூல்களை வெளியிட்டது.

  • கண்காட்சிகள்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]