பெருங்குன்றூர் கிழார் பாட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாட்டியல் இலக்கணம் கூறும் நூல்களில் ஒன்று பெருங்குன்றூர் கிழார் பாட்டியல். [1] இந்தப் பெருங்குன்றூர்க் கிழார் ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இலக்கணப் புலவர். [2] இந்த நூலிலிருந்து தொகுக்கப்பட்ட பாடல்கள் 20 பன்னிரு பாட்டியல் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளன. இந்தப் பெருங்குன்றூர் கிழார் பாட்டியல் நூலில் பெரும்பான்மை நூற்பாக்கள் புறத்துறைப் பாடல்களுக்கு இலக்கணம் கூறுகின்றன.

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 236. 
  2. சங்க கால இலக்கியப் புலவர்களில் ஒருவரான பெருங்குன்றூர் கிழார் வேறு