பூமி சாஸ்திரம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பூமி சாஸ்திரம் என்பது 1832 ஆம் ஆண்டு இரேனியசு பாதிரியரால் வெளியிடப்பட்ட ஒரு தமிழ் நூல் ஆகும். தமிழில் புவியியல் துறையில் வெளிவந்த முதல் நூல்களில் இதுவும் ஒன்று. இந்த நூலில் சமக்கிருதக் கலைச்சொற்கள் பரவலாக எடுத்தாளப்பட்டுள்ளன.[1]

அமைப்பு[தொகு]

இந்த நூல் ஆறு பகுதிகளையும் 534 பக்கங்களையும் கொண்டது.[2]

  • முதலாம் பகுதி - ஆசியக் கண்டம்
  • இரண்டாம் பகுதி - ஐரோப்பாக் கண்டம்
  • மூன்றாம் பகுதி - ஆப்பிரிக்க கண்டம்
  • நான்காம் பகுதி - அமெரிக்கக் கண்டம்
  • ஐந்தாப் பகுதி - அசுத்திரேலியா, தென் கடல் தீவுகள்
  • ஆறாம் பகுதி - சுட்டு, திருத்தங்கள்

உள்ளடக்கம்[தொகு]

புவியின் மக்கள் வாழும் ஒவ்வொரு கண்டத்தின் புவியியல், நாடுகள், காலநிலை, மக்கள், உயிரின விபரங்கள் இந்த நூலில் குழந்தைகள் புரிந்து கொள்ளக்கூடிய தமிழில் எழுதப்பட்டுள்ளது. பின்னாளில் பரந்த பயன்பட்டுக்கு வந்த பல கலைச்சொற்கள் எடுத்தாளப்பட்டுள்ளன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. இராம. சுந்தரம். (2009). தமிழ் வளர்க்கும் அறிவியல். சென்னை: நியூ செஞ்சரி புக் கவுசு.
  2. 2.0 2.1 Annotated bibliography for Tamil studies conducted by Germans in Tamilnadu during 18th and 19th centuries: A Virtual Digital Archives Project. பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் - Compiled by Prof. C.S. Mohanavelu.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூமி_சாஸ்திரம்_(நூல்)&oldid=3222250" இலிருந்து மீள்விக்கப்பட்டது