மலையக தேசிய முன்னணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலையக தேசிய முன்னணி
Upcountry National Front
தலைவர்வி. இராதாகிருஷ்ணன்[சான்று தேவை]
தொடக்கம்2013 சூலை 23
தேர்தல் சின்னம்
மண்வெட்டி[சான்று தேவை]
இலங்கை அரசியல்

மலையக தேசிய முன்னணி (Upcountry National Front) என்பது இலங்கையின் ஓர் அரசியல் கூட்டணி ஆகும். இக்கூட்டணி 2013 சூலை 23 இல் கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது.[1] இதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வி. இராதாகிருஷ்ணன் ஆவார்.[சான்று தேவை]

கூட்டணிக் கட்சிகள்[தொகு]

மலையக மக்கள் முன்னணி, பிரபா கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் காங்கிரஸ், தி. ஐயாதுரை தலைமையிலான தொழிலாளர் விடுதலை முன்னணி, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தலைமையிலான புதிய இடதுசாரி முன்னணி ஆகிய நான்கு கட்சிகள் இக்கூட்டணியில் ஒன்றிணைந்துள்ளன.[1] இவை நான்கும் இலங்கையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தோழமைக் கட்சிகளாகும்.[சான்று தேவை]

குறிக்கோள்[தொகு]

இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதே இக்கட்சியின் முக்கிய குறிக்கோளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இனப்பிரச்சினைத் தீர்வின்போது மலையக மக்களின் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட வேண்டும், மலையக மக்களுக்கு வீடு மற்றும் காணிகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் ஆகியவை இக்கூட்டணியின் அடிப்படைக் கோரிக்கைகள். [2]

தேர்தலில் போட்டி[தொகு]

2013 மாகாணசபைத் தேர்தல்களில் இக்கூட்டணி தனித்துப் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலையக_தேசிய_முன்னணி&oldid=3790024" இலிருந்து மீள்விக்கப்பட்டது