விருத்தாச்சலம் பழமலைநாதர் கோயில்

ஆள்கூறுகள்: 11°31′1.0194″N 79°19′12.738″E / 11.516949833°N 79.32020500°E / 11.516949833; 79.32020500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விருத்தாசலம் பழமலைநாதர் கோயில்
புவியியல் ஆள்கூற்று:11°31′1.0194″N 79°19′12.738″E / 11.516949833°N 79.32020500°E / 11.516949833; 79.32020500
பெயர்
புராண பெயர்(கள்):பழமலைநாதர் கோயில்
பெயர்:விருத்தாசலம் பழமலைநாதர் கோயில்
அமைவிடம்
ஊர்:விருத்தாசலம்
மாவட்டம்:கடலூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:விருத்தகிரீஸ்வரர் (எ) பழமலைநாதர்
உற்சவர்:சிவன்
தாயார்:விருத்தாம்பிகை, பாலாம்பிகை
உற்சவர் தாயார்:சக்தி
தல விருட்சம்:வன்னி மரம்
தீர்த்தம்:மணிமுக்தா நதி
ஆகமம்:காமிகம்
சிறப்பு திருவிழாக்கள்:மாசி மகம், தெப்பத்திருவிழா, தேர்த்திருவிழா
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தமிழர்களின் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:தஞ்சை பெரிய கோயில்
மலைகளின் எண்ணிக்கை:பழமலை
கல்வெட்டுகள்:48 கல்வெட்டுகள் ட
வரலாறு
தொன்மை:கி.மு.
நிறுவிய நாள்:மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்
கட்டப்பட்ட நாள்:மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்
அமைத்தவர்:கண்டராதித்த சோழன்
வலைதளம்:http://virudhagireeswartemple.org

பழமலைநாதர் கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலத்தில் அமைந்துள்ள சைவசமய சிவன் கோயிலாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். [1]

கோயில் அமைப்பு[தொகு]

இந்த சிவாலயம் நான்கு புறமும் சுமார் 26 அடி உயரமுள்ள மதிற்சுவரையும், 660 அடி நீளமும், 390 அடி அகலமும் உடைய ஒரு பெரிய கோவிலாகும். ஆலயத்தின் நான்கு புறமும் 7 நிலைகளையுடைய பெரிய கோபுரங்கள் நெடிதுயர்ந்து காணப்படுகின்றன. கிழக்கே உள்ளே பிரதான வாயில் வழியாக உள்ளே சென்றால் 16 தூண்களை உடைய மண்டபம் இருக்கிறது.

இத்தலத்தின் இறைவி பெரிய நாயகி அம்மையின் சந்நிதி ஒரு தனி கோயிலாக முதல் பிரகாரத்தின் வடபுறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மூன்றாம பிரகாரத்தில் 63 நாயன்மார்களில் உருவச் சிலைகளும், பிந்து மாதவப் பெருமாள் சந்நிதியும் உள்ளன. 63 மூவர் பிரகாரத்தின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் காலபைரவர் மூர்த்தம் காசியில் இருப்பது பொன்ற வடிவமைப்புக் கொண்டது.

நான்காம் பிரகாரத்தில் இத்தலத்தின் மூலவர் பழமலைநாதர் கருவறை இருக்கிறது. கருவறையின் வாயிலில் இரு புறமும் துவாரபாலகர்கள் சிலைகள் காணப்படுகின்றன. மூன்றாம் பிரகாரத்தின் வடமேற்கு கோஷ்டத்தில் பாலாம்பிகை சந்நிதி உள்ளது.

இறைவன், இறைவி[தொகு]

மூலவர் விருத்தகிரிஸ்வரர் (எ) பழமலைநாதர், தாயார் விருத்தாம்பிகை (எ) பெரிய நாயகி மற்றும் பாலாம்பிகை (எ) இளைய நாயகி ஆவர்.

ஆழத்து விநாயகர்[தொகு]

முதல் வெளிப் பிரகாரத்தில் ஆழத்து விநாயகர் எனப்படும் பாதாள விநாயகர் சந்நிதி கிழக்கு நோக்கி சுமார் 18 அடி பள்ளமான இடத்தில் அமைந்துள்ளது. விநாயகரின் அறுபடை வீடுகளில் இந்த விநாயகர் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

ஆகமக் கோயில்[தொகு]

சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு. இவற்றை 28 லிங்கங்களாக இத்தலத்தில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்துள்ளார். இந்த லிங்கங்கள் கைலாசப் பிராகாரத்தின் வட மேற்கு பகுதியில் தனி சன்னதியில் அமைந்துள்ளன. இதில் தெற்கு வரிசையில் உள்ள லிங்கங்களில் நடுவில் விநாயகரும், மேற்கு வரிசையில் உள்ள லிங்கங்களின் நடுவில் வள்ளி தெய்வானையுடன் முருகனும் அருள்பாலிக்கின்றனர். 28 ஆகமங்களுக்குரிய பெயர்களான, காமிகேஸ்வரர், யோகேஸ்வரர், சிந்தியேஸ்வரர், காரணேஸ்வரர், விஜயேஸ்வரர், அஜிதேஸ்வரர், தீபதேஸ்வரர், சூட்சமேஸ்வரர், சகஸ்ரேஸ்வரர், அம்சுமானேஸ்வரர், சப்பிரபேதேஸ்வரர், விசுவாசேஸ்வரர், சுவாயம்பேஸ்வரர், அநலேஸ்வரர், வீரேஸ்வரர் (வீரட்டேஸ்வரர்), ரவுரவேஸ்வரர், மகுடேஸ்வரர், விமலேஸ்வரர், சந்திரஞானேஸ்வரர், முகம்பிபேஸ்வரர், புரோத்கீதேஸ்வரர், லலிதேஸ்வரர், சித்தேஸ்வரர், சந்தானேஸ்வரர், சர்வோத்தமேஸ்வரர், பரமேஸ்வரர், கிரணேஸ்வரர், வாதுளேஸ்வரர் என்ற பெயர்கள் அவற்றுக்கு சூட்டப்பட்டுள்ளன. இந்த அமைப்பு வேறு எங்கும் காண இயலாத சிறப்பாகும். இக்கோயிலை ஆகமக்கோயில் என்றும் அழைப்பார்கள்.

கோயில் சிறப்பு[தொகு]

  • இந்தக்கோயில் மிக முக்கிய சிறப்பு 5 என்கிற எண்ணாகும். இந்த கோயிலில் 5 கோபுரம், 5 நந்தி, 5 தேர், 5 கொடிமரம் என எல்லாமே ஐந்து ஐந்தாக அமைந்துள்ளது.
  • இந்தக்கோயிலில் உள்ள ஆழத்து விநாயகர், விநாயகரின் ஆறுபடை வீடுகளில் ஒன்று.
  • காசியை விட வீசம்(தமிழ் அளவை) புண்ணியம் அதிகம் என தல வரலாறு குறிப்பிடுகிறது. இதனால் விருத்தகாசி என்கிற சிறப்புப்பெயரும் இவ்வூருக்கு உண்டு.
  • 63 நாயன்மார்கள் சிலை காண்பதற்கு அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அது வரலாற்றின் சிறப்பை உணர்த்துகிறது.

முக்கிய திருவிழாக்கள்[தொகு]

வழிபட்டோர்[தொகு]

பிரமனும் அகத்தியரும் வழிபட்ட தலம் எனப்படுகிறது. சுந்தரர் பரவையாருக்காகப் பொன் பெற்று, அப்பொன்னை மணிமுத்தாற்றில் இட்டு திருவாரூர் கமலாயத்தில் எடுத்தார் என்பது தொன்னம்பிக்கை (ஐதிகம்).

பிற தகவல்கள்[தொகு]

இக்கோயிலிலிருந்து கடத்திச்செல்லப்பட்ட 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அர்த்தநாரீஸ்வரர் சிலை ஆஸ்த்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள நியு சவுத் வேல்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருப்பது காவல்துறை விசாரணையில் ஊர்ஜிதப்படுத்தப்பட்டது [2][3] . பல கட்ட விசாரணைகள் மற்றும் முயற்சிகளுக்குப்பின் ஆஸ்த்திரேலிய பிரதமர் டோனி அபாட்(Tony Abbot) அவர்களின் 2014 இந்திய வருகையின் போது இச்சிலை இந்தியாவிடம் ஓப்படைக்கப்பட்டது.

குடமுழுக்கு[தொகு]

இக்கோயிலின் குடமுழுக்கு 6 பிப்ரவரி 2022இல் நடைபெற்றது. [4]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  2. "விருத்தாசலம் கோயிலிலிருந்து 11-ம் நூற்றாண்டைச்சேர்ந்த அர்த்தநாரீஸ்வரர் சிலை ஆஸ்த்திரேலியா கடத்தல்". தி இந்து (ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 10 செப்டம்பர் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "விருத்தாசலம் கோயில் சிலை கடத்தல் பற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி". டைம்ஸ் ஆஃப் இந்தியா (ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 10 செப்டம்பர் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் குடமுழுக்கு, லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம், இந்து தமிழ் திசை, 7 பிப்ரவரி 2022

வெளி இணைப்புகள்[தொகு]