சொல் (எண் தொகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எண் தொகை என்பது பொருள்களையும், செய்திகளையும் எண்ணிக்கை வகையால் தொகுத்துப் பார்க்கும் ஒருவகைப் பார்வை. ஆசிரிய நிகண்டு, திவாகர நிகண்டு போன்ற நூல்கள் இதனைப் ‘பல்பெயர்க் கூட்டம்’ [1] எனக் குறிப்பிடுகின்றன. இவை வடமொழி நெறியைப் பின்பற்றியும், தமிழர் கற்பனை வழியிலும் தோன்றியவை.[2]

தொகை[தொகு]

2 (இருமை)[தொகு]

  • அறம் – இல்லறம், துறவறம்
  • இன்பம் – இல்லது, உள்ளது
  • சுடர் – ஞாயிறு, திங்கள்
  • பயன் – நன்மை, தீமை
  • பேறு – இம்மை, மறுமை
  • பொருள் – கல்வி, செல்வம்
  • மரபு – தாய்வழி, தந்தைவழி
  • வினை – நல்வினை, தீவினை

3 (மும்மை)[தொகு]

  • இடம் – தனமை, முன்னிலை, படர்க்கை
  • உலகு – பூமி, ஆகாயம், சுவர்க்கம்
  • காலம் – இறந்த்து, நிகழ்வது, வருவது
  • குற்றம் – காமம், வெகுளி, மயக்கம்
  • செயல் – படைத்தல், காத்தல், அழித்தல்
  • பொறி – மனம், வாக்கு, காயம்
  • மும்மை – உம்மை, இம்மை, மறுமை
  • மொழி – பட்டாங்கு, பழித்தல், புகழ்தல்

4[தொகு]

  • அரண் – மலை, காடு, மதில், நீர்
  • இழிசொல் – பொய், குறளை, கடுஞ்சொல், பயனில்சொல்
  • கேள்வி – அறம், பொருள், இன்பம், வீடு
  • நிலை [3] – பைசாசம் [4], ஆவீடம் [5], மண்டிலம் [6], பிரத்தியாவீடம் [7]
  • புண்ணியம் – தவம், நல்லொழுக்கம், தானம், கல்வி
  • புலமை – கவி, கமகன், வாதி, வாக்கி
  • புலமை (கமகன்) – ஞாபகம், செம்பொருள், நடைபொருள், காசுபொருள் – திறமறிந்து கூறுபவன்.
  • புலமை (கவி) – ஆசுகவி, மதுரகவி, சித்திரம், வித்தாரம்
  • புலமை (வாக்கி) – அறம், பொருள், இன்பம், வீடு - கூறுபவன்
  • புலமை (வாதி) – ஏது, மேற்கோள், எடுத்துக்காட்டு, தன்திறம் – காட்டிப் பேசுபவன்
  • வேதம் – இருக்கு, தைத்திரியம், சாமம், அதர்வணம்

5[தொகு]

  • ஈசன் முகம் – சத்தியோசாதம் [8], வாமம் [9], அகோரம் [10], தற்புருடம் [11], ஈசானம் [12]
  • உண்டி – கடித்து, பருகி, விழுங்கி, நக்கி, எடுத்து உண்ணும் உணவு.
  • ஐம்பால் முடி – கொண்டை, சுருள், குழல், பனிச்சை சடை வார்முடி வாரிச் செருகல்
  • குதிரை நடை – மல்லகதி [13], மயூரகதி [14], வானரகதி [15], சரகதி [16], அசர-கதி [17]
  • சத்தம் – தோல், துளை, நரம்பு, கஞ்சனை, பாடல்
  • தாய் – பாராட்டும் தாய் [18], ஊட்டும் தாய் [19], முலைத்தாய் [20], கைத்தாய் [21], செவிலித்தாய் [22]
  • திணை – குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம்
  • பஞ்சாங்கம் – திதி, வாரம், நாள், யோகம், கரணம்
  • படுக்கை (பஞ்ச சயனம்) – மயிரின் சேணம் [23], வன்பஞ்சு [24], தூவி [25], பயிற்றந்தண்வீ [26], பாய்
  • பாதகம் (பஞ்சபாதகம்) – கொலை, களவு, கள்ளுண்ணல், குருநிந்தை [27], பொய்
  • பால் – ஒருவன், ஒருத்தி, பலர், ஒன்று, பல
  • பூதம் (பஞ்சபூதம்) – மண், நீர், கனல், காற்று, விண்
  • பொறி (ஐம்பொறி) – மெய், வாய், கண், மூக்கு, செவி
  • மன்மதன் பானம் – முல்லை [28], அசோகு [29], நீலம் [30], அல்லி [31], முளரி [32]
  • வாய்மணம் (பஞ்ச வாசனம்) – தக்கோலம், ஏலம், இலவங்கம், சாதிக்காய், கருப்பூரம்
  • வினா – அறியான் வினாவுதல், அறிவு ஒப்புமை காண்டல், ஐயம் அறுத்தல், அவன்றிவு தான்கோடல், மெய் அவற்குக் காட்டல்

6[தொகு]

  • அரசியல் – படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் [33]
  • உட்பகை – காமம், வெகுளி, உலோபம், மாற்கொள் மோகம், மதம், மாச்சரியம்
  • உலகியல் நிலை – அறநிலை-அறம் [34], மறநிலை-அறம் [35], அறநிலைப்பொருள் [36], மறநிலைப்பொருள் [37], அறநிலை-இன்பம் [38], மறநிலை-இன்பம் [39]
  • கருமம் (கரும பூமி) – உழவு, தொழில், வரைவு, வாணிகம், விச்சை, சிற்பம் ஆகிய தொழில்கள்
  • சக்கரவர்த்தி – அரிச்சந்திரன், நளன், முசுகுந்தன், பரூரவன், சகரன், கார்தவீரியன்
  • சமயம் – வைசேடிகம், நையாயிகம், மறுவில் மீமாம்சை, ஆருகதம், பௌத்தம், பிரதி-லோகாயதம் [40]
  • சுவை – தித்தித்தல், புளித்தல், கைத்தல், துவர்த்தல், கூர்த்தல்,[41] காழ்த்தல் [42]
  • தொழில், அறுதொழில், 6 தொழில் – அந்தணர் [43], அரசர் [44], வணிகர் [45], வேளாளர் [46][47][48]
  • தொழில், ஆறு அங்கம் – மந்திரம், வியாகரணம், நிகண்டு, சந்தோ-பிசிதி, நிருத்தம், சோதிடம்
  • நன்னாட்டமைதி – செல்வம், விளைவு, பல்வளம், செங்கோன்மை, கொல்குறுபு இன்மை, கொடும்பிணி இன்மை [49]
  • படை (தானை) – வேல், வாள், வில், தேர், பரி, களிறு
  • போகபூமி - ஆதியரிவஞ்சம், நல்லரிவஞ்சம், ஏமதவஞ்சம், அரணவஞ்சம், தேவகுருவம், உத்தரகுருவம்

7[தொகு]

  • உலகம், கீழுலகம் – அதலம், விதலம், சுதலம், நிதலம், தராதலம், ரசாதலம், மகாதலம்
  • உலகம், மேலுலகம் - பூலோகம், புவலோகம், சுவலோலம், மகலோகம், சனலோகம், தவலோகம், சத்தியலோகம்
  • கடல் – உவர், கரும்பு, மது, நெய், தயிர், பல், புனல்,
  • தாது, உடலிலுள்ள தாது – இரதம் மஞ்ஞை என்னும் வழுக்குப்பசை, உதிரம், என்பு, தோல், தசை, மூளை, சுக்கிலம்
  • தீவு (பொழில்) – நாவலந்தீவு, இறலித்தீவு, குசையின்தீவு, கிரவுஞ்சத்தீவு, சான்மலித்தீவு, தெங்கின்தீவு. புட்கரத்தீவு
  • நரகம் – பெருங்களிற்று வட்டம், பெருமணல் வட்டம், எரியின் வட்டம், புகையின் வட்டம், இருளின் வட்டம், பெருங்கீழ் வட்டம், அரிபடை வட்டம்
  • பேறு – செங்கோலாட்சி தரும் பேறு – அறம், பொருள், இன்பம், அன்பு, பொறுமை, புகழ், மதி
  • மலை, குலவரை - இமயம் மந்தரம், கைலை, வடவிந்தம், நிடதம், எமகூடம், நீலகிரி
  • மழை, (சொரிவன) – பொன், பூ, புனல், மணி, மண், கல், தீ
  • மாதர், சத்த மாதர் – அபிராமி, இந்திராணி, வைணவி, வராகி, கௌமாரி, மயேசுவரி, மாகாளி
  • முகில், மேகம் – புட்கலாவர்த்தம், சங்காரித்தம், ஆவர்த்தம், சமவர்த்தம், துரோணம், காளமுகில், நீலவருணம்

8[தொகு]

  • அச்சம், பிறப்பில் சிறப்பிலா எண்பேர் அச்சம் – சிறப்பில் சிதடு, உறுப்பில் பிண்டம், கூன், குறள், ஊமை, செவிடு, முடம், மருள் [50]
  • கணம் [51][52] – நீர் [53], தீ [54], அந்தரம் [55], இயமானன் [56][57], மதி [58], எரிகதிர் [59], மாருதம் [60][61], மாநிலம் [62]
  • கணிதம் – நங்கலிதம், விபகலிதமு, குணகம், பாகாரம், வர்க்கம், வர்க்க-மூலம், கனம், கன-மூலம்
  • காட்சி (தெளிவு) – ஐயப்படாமை, அவாவொன்று இன்மை, அறிவு உவர்ப்பு இன்மை, மூடம் அறுத்தல், அறப்பழி அழித்தல், அழிந்தோரை நிறுத்தல், அறத்தை விளக்கல், அறு சமயத்தவர்க்கு அன்புறல்
  • குணம் – அனந்த ஞானம், அனந்த தரிசனம், அனந்த வீரியம், அனந்த சுகி, நாமம் இன்மை, கோத்திரம் இன்மை, ஆயு [63] இன்மை, அழியா இன்பம்
  • குணம் (வணிகர்) – தனிமையாதல், முனிவிலன் ஆதல், இடன் அறிந்து ஒழுகல், பொழுதொடு புணர்த்தல், உறுவது தெரிதல், இறுவது [64] அஞ்சாமை, ஈட்டம், வகுத்தல்
  • குற்றம் – ஞாநாவரணியம், தரிசநாவரணியம், வேதநீயம், மோகநீயம், ஆயுநாமம், கோத்திரம், அந்தராயம் அந்தராயம் இரண்டு, காயவந்தராயம், வாயுவந்தராயம்
  • சித்தி, அட்டமா சித்தி, - அணிமா, மகிமா, இலகிமா, கரிமா, பிராந்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம்
  • திக்குப் பாலகர் – இந்திரன் கிழக்கு அருகன் திசை கொடி, அங்கி தென்கிழக்கு பூனை, இயமன் தெற்கு சீயம், நிருதி தென்மேற்கு ஞாளி, வருணன் மேற்கு இடபம், வாயு வடமேற்கு கழுதை, குபேரன் வடக்கு சோமன் திசை யானை, ஈசானன் வடகிழக்கு காகம்,
  • நாகம், அட்டமாநாகம் – வாசுகி, அனந்தன், விட்டபற்பன், மகாபற்பன், சங்கபாலன், தக்கன், கார்க்கோடகன், குளிகன்
  • மங்கலம், அட்டமங்கலம் – கவரி [65], நிறைகுடம், கண்ணாடி, தோட்டி, முரசு, விளக்கு, பதாகை பறக்கும்-கொடி, இணைகயல்
  • மணம் – பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெயுவம், காந்தருவம், ஆசுரம், இராக்கதம், பைசாசம்
  • மூர்த்தம் [66] – பார், நீர், தேயு [67], வாயு [61], ஆகாயம், சூரியன், இந்து, இயமானன்
  • மெய்யுணர்வு (மெய்ப்பரிசம்) – ஒட்டுதல், பிடித்தல், தீண்டல், தடவுதல், கட்டுதல், வெட்டல், குத்துதல், ஊன்றல்
  • யோகம், அட்டாங்க யோகம் – இயமம் [68], நியமம் [69], ஆசனம், பிரணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி
  • வெற்றி – வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை[70]

9[தொகு]

  • கண்டம், நவகண்டம் – வடபால்விதேகம், தென்பால்விதேகம், கீழ்பால்விதேகம், மேல்பால்விதேகம், வடபால்-இரேவதம், தென்பால்-இரேவதம், வடபால்-பரதம், தென்பால்-பரதம், மத்திம-கண்டம்
  • தாரணை, நவதாரணை – நாமதாரணை, வச்சிரதாரணை, மாயாதாரணை, சித்திரதாரணை, செய்யுள்தாரணை, நிறைவு குறைதலாகிய எண்பொருள்தாரணை [71] , சத்ததாரணை, வத்துதாரணை, சதுரங்கதாரணை
  • தானம், நவமானம் – அரிதானம், மருமதானம், சமதானம், சயதானம், சித்திரதானம், துருவதானம், நிவிர்ததானம், படிமதானம், விடதானம்
  • புண்ணியம், நவபுண்ணியம் – எதிர்கொளல், பணிதல், இருக்கை, கால்-நீர், புதுமலர், நூபம், விளக்கு, புகழ்தல், அறுசுவை உண்டி அருந் தவர்க்கு ஆற்றுதல்
  • மணி, நவமணி – வைரம், வைடூரியம், முத்து, மாணிக்கம், பவளம், கோமேதகம், இந்திரநீலம், மரகதம், புட்பராகம்
  • ரசம், நவரசம் – சிங்காரம், பெருநகை, கருணை, வீரியம், அற்புதம், பயம், ரௌத்திரம் [72], குற்றை, சாந்தம்

10[தொகு]

  • அருச்சுனன் பெயர் – பற்குணன், சுவேதன், வாகனன், பார்த்தன், சல்லியசாதி, கிரீடி, தனஞ்சயன், விசயன், விபற்சு, காண்டிவன்
  • சிற்பம் – கல், உலோகம், செங்கல், மரம், மண், சுதை, தந்தம், வண்ணம், கண்ட-சருக்கரை, மெழுகு,
  • தசாங்கம் நூல் – ஆறு, மலை, யானை, குதிரை, நாடு, ஊர், கொடி, முரசு, தார், தேர் பற்றிப் பாடுவது.
  • தசாவதாரம் – மீன், ஆமை, வராகம், நரசிங்கம், வாமனம், பரசிராமன், இராமன், பலதேவன், கண்ணன், கற்கி
  • திசை – 4 திசையும், 4 கோணமும் சேர்ந்து 8. இவற்றுடன் மேலே, கீழே என்னும் திசைகளையும் சோர்த்தால் 10
  • வேளாளர் தொழில் – ஆணைவழி நிற்றல், அழிந்தோரை நிறுத்தல், கைக்கடன் ஆற்றல், கசிவு அகத்து உண்மை, ஒக்கல் போற்றல், ஓவா முயற்சி, மன்னனுக்கு இறை தருதல், ஒற்றுமை கோடல், விருந்து புறந்தருதல், திருந்திய ஒழுக்கம்

11[தொகு]

உருத்திரர், ஏகதச உருத்திரர் - மாதேவன், சிவன், உருத்திரன், சங்கரன், நீலலோகிதன், ஈசானன், விசயன், வீமதேவன், பவோற்பவன், காபாலி, சௌமியன்

12[தொகு]

  • ஆதித்தர், துவாதசாதித்தர் - தாத்துரு, சக்கரன், அரி, அயன், மித்திரன், வருணன், அஞ்சுமான், இரணியன், பகவான், திவச்சுவான், பூடன், சவித்துருதுவட்டன்,
  • உயிர்-வேதனை - அனல், சீதம், வாதம், பனி, புனல், அசனி, விடம், விடமருந்து, பசி, நீர்வேட்கை, பிணி, முனிவு-அறாமை

18[தொகு]

  • அரசர் கிளைஞர் ஐம்பொருங்குழு, எண்பேராயம், பதின்பெரு மக்கள்
    • ஐம்பெருங்குழு - அமாத்தியர் [73], புரோகிதர், சேனாபதியர், தூதுவர், சாரணர்
    • எண்பேராயம் - கரணக்கிளைஞர் [74], கமவிதிகாரர், கனகச்சுற்றம், கடைகாப்பாளர், நகரமாக்கள், நளிபடைத் தலைவர், குதிரை-வீரர், யானை-வீரர்
    • பதின்பெருமக்கள் - அடுத்த-நட்பாளர், அந்தணாளர், படைத்தொழிலாளர், மருத்துவக் கலைஞர், நிமித்தகாரர், நீள்நில வேந்தர் [75] முதலானோர்
  • தருமநூல்
    • மனு, அந்நிரி,[76] விண்டு, யாஞ்ஞவற்சியம், உசனம், ஆங்கீரசம்
    • இயமம், ஆபத்தம்மம், சம்பவர்த்தம், காத்தியாயனம், பிரகற்பதி, பராசரம்
    • வியாசம், சங்கலிதம், தர்க்கம், கௌதமம், சாதான்மம், வசிட்டம்
  • தேவர்
    • அமரர், சித்தர், அசுரர், தைத்தியர், கருடர், கிந்நரர்,
    • கிம்புடர், காந்தருவர், இயக்கர், விஞ்சையர், அராக்கதர், பூதர்,
    • பைசாசர், அந்தரர், முனிவர், உரகர், ஆகாசவாசியர், போகபூமியர்
  • புராணம்
    • மச்சியம், கூர்மம், வராகம், வாமனம், பிரவம், வைணவம்
    • பாகவதம், சைவம், இலைஞம், பௌடிகம், நாரதாயம், காருடம்,
    • பிரம-கைவர்த்தம், மார்க்கண்டேயம், காந்தம், பிரமாண்டம், ஆக்கினேயம், பதுமம்
  • புராணம், உப புராணம்
    • உசுனம், கபிலம், காளி, சனற்குமாரம், சாம்பவம், சிவ-தன்மம்,
    • சௌரம், துருவாசம், நந்தி, நரசிங்கம், நாரதீயம், பராசரம்
    • வியாசம், சங்கலிதம், பாரக்கவம், ஆங்கீரம், மாரீசம், ஆனவம் [77]
  • மொழி, பதினெண் பாடை -
    • அங்கம், வங்கம், கலிங்கம், கௌசிகம், சிந்து, சோனகம்,
    • திராவிடம், சிங்களம், மகதம், கோசலம், மராடம், கொங்கணம்
    • துளுவம், சாவகம், சீனம், காம்போசம், பருணம், பப்பரம்
  • யாக்கையில் குற்றம்
    • பசி, நீர்வேட்கை, பயம், வெகுளி, உவகை, வேண்டல்,
    • நினைப்பு, உறக்கம், நரை, நோய்படுதல், மரணம், பிறப்பு,
    • மதம், இன்பம், அதிசயம், வியர்த்தல், கேதம், கையறவு
  • யாகம் - அக்கினிகோத்திரம், அக்கினிட்டோமம், அக்கினியாதேயம், அட்டகைபார்வனம், அத்தியக்கினிட்டோமம், அதிராத்திரமம், ஆக்கிரகாயனி, ஆக்கிரயணம், ஆசுவாயுசி, உத்தியம், சாதுர்மாசியம், சிராத்தம், சிராவணி, சோடசீ, சௌத்திராமணி, தரிசபூர்ணமாசம், தைத்திரி, தோரியாமம், நிருடப்பந்தம், வாசபேயம்,[78]

மரபு[தொகு]

25[தொகு]

  • தத்துவம்
நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் (ஐம்பொரும்பூதம்)
மெய், வாய், கண், மூக்கு, செவி (ஐந்து வாயில்)
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் (ஐம்புலன்)
கை, கார், குதம், வாய், மானுடக் குறி (கருமேந்திரியங்கள் ஐந்து)
மனம், புத்தி, ஆங்காரம், சித்தம், இயமானன் (ஞானேந்திரியங்கள்)

என்னும் இவை 25 தத்துவங்கள்

28[தொகு]

  • அணி (அலங்காரம்)
உருவகம், உவமை, வழிமடக்கு, நிலைமடக்கு, விரிசுடர்-விளக்கு, (5)
வேற்றுமை-நிலை, வெளிப்படு-நிலை, சொல் [79], தன்மை, பிறபொருள்-வைப்பு, (5)
சிறப்பு-மொழி, சிலேடை, மறுத்து-மொழி-நிலை, நோக்கு, உள்தொடர், தொகை-மொழி, மிகை-மொழி, உடனிலை, கூட்டம் (9)
உவமான-உருவகை, நுவலா-நுவற்சி, தலை கட்டிய மொழி [80], நிதரிசனப் பாராட்டு, ஒருங்கிய நிலை, ஐயம், உயர்வு, விரவியல், வாழ்த்து (9)

என 28 அணி வகை

32[தொகு]

  • அறம்
  1. ஆதுலர் சாலை [81],
  2. ஓதுவார்க்கு உணவு
  3. அறுசமயத்தோர்க்கு உணவு
  4. பசுவுக்கு வாயுறை
  5. சிறைச்சோறு
  6. ஐயம்
  7. தின்பண்டம்
  8. மகச்சோறு [82]
  9. மகப்பெறுவித்தல் [83]
  10. மக வளர்த்தல்
  11. மகப்பால்
  12. அறவைப் பிணம் சுடுதல் [84]
  13. அறவைத் தூரியம் [85]
  14. வண்ணார்
  15. நாவிதர்
  16. வதுவை
  17. பூணூல்
  18. நோய் தீர்க்கும் மருந்து
  19. கண்ணாடி தருதல்,
  20. காதோலை தருதல்
  21. கண்ணுக்கு கருந்து
  22. தலைக்கு எண்ணெய்
  23. போகத்துக்குப் பெண் தருதல்
  24. சுண்ணாம்பு தருதல்
  25. துயரம் போக்கல்
  26. தண்ணீர் பந்தல்
  27. மடம் கட்டுதல்
  28. குளம் வெட்டுதல்
  29. பூங்கா அமைத்தல்,
  30. ஆடுமாடுகளுக்கு நீர்த்தொட்டி
  31. பசுவின் மேல் காளை ஏற விடுதல்
  32. கொலை-உயிர் மீட்டல்

ஆகிய 32-ம் அறச்செயல்கள்.

33[தொகு]

  • தேவர்
ஆதித்தர் 12
அசுவினி தேவர் 2
ஈசர் 11
வசுக்கள் 8

ஆக 33 தேவர்

தத்துவம்[தொகு]

  • உயிர் அறிவு
  • காவிய இயற்கை
  • பிள்ளைத்தமிழ், ஆண்பால் பிள்ளைத்தமிழ், பெண்பால் பிள்ளைத்தமிழ்

எண்பெயர்[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. பல்பெயர்க் கூட்டத் தொகுதிப்பெயர்த் தொகுதி
  2. இக் கட்டுரையில் முன்னோர் நூல்களில் தொகுத்துக் காட்டியவை மட்டும் இடம்பெறுகின்றன. பிற்காலத்து எழும் அவரவர் கற்பனைக்கு இடமில்லை.
  3. நின்றுகொண்டோ, அமர்ந்துகொண்டோ இருக்கும் நிலை
  4. ஒருகாலை மற்றொரு காலின்மேல் வைத்துக்கொண்டு நிற்கும் திலை
  5. வலக்காலைச் சம்மணம் போட்டுக்கொண்டும், இடக்காலைத் தொங்க விட்டுக்கொண்டும் மேடையில் அமர்ந்திருக்கும் நிலை
  6. இரு கால்களையும் மடக்கிச் சம்மணம் போட்டுக்கொண்டு அமர்ந்திருக்கும் நிலை
  7. இடக்காலைச் சம்மணம் போட்டுக்கொண்டும், வலக்காலைத் தொங்கவிட்டுக்கொண்டும் மேடையில் அமர்ந்திருக்கும் நிலை.
  8. அம்மையப்பர்
  9. பாம்புடன் தோன்றல்
  10. எரிக்கும் கண்ணுடன் தோன்றல்
  11. ஆண்மகன் கோலம்
  12. தவக்கோலம்
  13. வளநடை "மல்லல் வளனே (தொல்காப்பியம்)
  14. மயில் போன்ற ஒய்யார நடை
  15. குரங்கு போல் தவ்வி நடத்தல்
  16. பூச்சரம் போல குதிகளோடு சேர்ந்து நடத்தல்
  17. இணையாத தனித்தன்மை கொண்ட நடை
  18. தாலாட்டுப் பாடி ஆட்டும் தாய்
  19. சோறூட்டும் தாய்
  20. முலைப்பால் ஊட்டும் பெற்ற தாய்
  21. குழந்தையைக் கையில் வைத்திருக்கும் தாய்
  22. செவ்விய முறையில் வளர்க்கும் தாய்
  23. பூமயிர் மெத்தை
  24. இலவம் பஞ்சு மெத்தை
  25. அன்னத்தின் தூவியாலான மெத்தை
  26. பயிற்றம்பூ திணித்த மெத்தை
  27. குருத்துரோகம்
  28. உன்மத்தம் செய்து மயக்கும்
  29. தீரம் தந்து வலிமை உள்ளவனாக்கும்
  30. சந்தாபம் தந்து சுடும்
  31. வசீகரணம் செய்து அழகில் ஆழ்த்தும்
  32. அழகேற்றி மோகனம் செய்யும்
  33. திருக்குறள் 381
  34. வருணம் காப்பில் பிறழா நெறிநிலை, பெறு வன்பொருளால் பேணும் பெற்றி
  35. ஆனிரை மீட்டல், அரும் வகை தெறுதல், ஊனமில் செஞ்சொல் உதவிப் போர்வயின் ஈனம் செய்தல்
  36. நெறிவழி நின்று நெறியால் உழந்து பெறும் பொருள்
  37. அமர் உழந்து கொண்டனவும் அதுந்திறை கொண்டனவும் தவறு செய் தீயோர் தண்டப் பொருளும் கவர் சூது வென்றவும்
  38. ஒத்த குலம் ஒத்த ஆயுள், ஒத்த செல்வம், ஒத்த நலன் உடைய ஆண்-பெண் உறவு
  39. ஏறு தழுவல், இலக்கம் எய்தல், கூறு பொருள் கொடுத்தல் வலிதிற் கோடல், மாறுபடு நிலை
  40. பாடாண்டத்தொகை (பிரபந்தம்) 96 வகை.
  41. இனிப்பு
  42. காரம்
  43. ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல்
  44. ஓதல், வேட்டல், புரை தீரப் பெரும் பார்ப்பாரைப் புரத்தல், ஈதல், கரையில்லாத படைக்கலம் கற்றல் (படைக்கலப் பயிற்சி), பகைவெல்ல்ல் (விசயம்)
  45. ஓதல், வேட்டல், ஈதல், உழவு, பசுக்காவல், வாணிகம்
  46. உழவு, பசுக்காவல், வாணிபம், குயிலுவம், காருகம் குயிலுவம்
  47. குயிலுவம் என்பது வாத்தியம் கொட்டுதல்.
  48. காருகம் என்பது பருத்தி நூலாலும், பட்டு நூலாலும் ஆடை நெய்து சுமந்து விற்றல்.
  49. திருக்குறள் 735, 736
  50. பித்து
  51. நூலில் முதற்சீர் மூவசைச் சீராக அமையும் பாங்கு
  52. தலைவனை நிலம், நீர், மதி, இயமானன் ஆகியோருக்கு உரிய சீர்க்கணம் வைத்துப் பாடினால் தலைவனுக்கு ஊனம் உண்டாகும்
  53. நேர்நிரைநிரை, கூவிளங்கனி வாய்பாடு
  54. நிரைநேர்நிரை, புளிமாங்கனி வாய்பாடு
  55. நிரைநிரைநேர், கருவிளங்காய் வாய்பாடு
  56. நேர்நேர்நேர், தேமாங்காய் வாய்பாடு
  57. வெட்டவெளி
  58. நிரைநேர்நேர், புளிமாங்காய் வாய்பாடு
  59. நேர்நிரைநேர், கூவிளங்காய் வாய்பாடு
  60. நேர்நேர்நிரை, தேமாங்கனி வாய்பாடு
  61. 61.0 61.1 காற்று
  62. நிரைநிரைநிரை, கருவிளங்கனி வாய்பாடு
  63. கண்ணோட்டம்
  64. விளைவு
  65. விசிறி
  66. முகூர்த்தம், முழுத்தம்
  67. தீ
  68. கொல்லா விரதம், மெய்மை கூறல், கள்ளாமை, பிறர் பொருள்மேல் காதல் இன்மை
  69. தவம், தூய்மை, தத்துவ-நூல் ஓர்தல், மனம் உவந்திருத்தல், தெய்வம் வழிபடல்
  70. 1 வெண்பாச் சூத்திரம்
    வெட்சி நிரைகவர்தல், மீட்டல் கரந்தையாம்
    வட்கார்மேற் செல்வது வஞ்சியாம் – உட்கார்
    எதிரூன்றல் காஞ்சி எயில்காத்தல் நொச்சி
    அதுவளைத்தல் ஆகும் உழிஞை.
    2 ஆசிரியப்பாச் சூத்திரம்
    அதிரப் பொருவது தும்பை ஆகும்
    போர்க்களத்து மிக்கார் செருவென்றது வாகையாம்
    அத்திணைத் தொழிலும் அத்திணைப் பூவும்
    அப்பெயர் பெறுதல் அந்நிலத்து உரியவே
  71. எளிமை
  72. ஏளனம்
  73. அமைச்சர்
  74. செயலாளர்
  75. இறை செலுத்தும் குறுநில மன்னர்
  76. மிகைநூல்(ஔரிதம்),
  77. மிகைநூல்கள் (வசிட்டலைங்கம், வாருணம்)
  78. 18 எனக் காட்டும் இதனுள் 20 உள்ளன.
  79. வார்த்தையணி
  80. அந்தாதி
  81. போக்கற்ற முடம், குருடு முதலானோர் சாலை
  82. பிள்ளைச்சோறு
  83. பிள்ளைப்பேறு பார்த்தல்
  84. ஆதரவற்றோர் பிணங்களை எரித்தல்
  85. அறநிலையங்களை விளக்குமாற்றால் கூட்டுதல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சொல்_(எண்_தொகை)&oldid=3296161" இலிருந்து மீள்விக்கப்பட்டது