ஓமாயி வியாரவாலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹோமை வியாரவல்லா
Homai Vyarawalla
பிறப்பு(1913-12-09)9 திசம்பர் 1913
நவசாரி, குஜராத், இந்தியா
இறப்பு15 சனவரி 2012(2012-01-15) (அகவை 98)
தேசியம்இந்தியர்
கல்விசர் ஜே. ஜே. கலைக்கல்லூரி, பம்பாய்
பணிபுகைப்பட நிருபர்

ஓமாயி வியாரவாலா (ஹோமை வியாரவல்லா, Homai Vyarawalla, 9 திசம்பர் 1913 – 15 சனவரி 2012), இந்தியாவின் முதல் பெண் புகைப்பட நிருபர் என அறியப்பட்டவர். பொதுவாக டால்டா-13 என அழைக்கப்பட்டவர். இவர் குஜராத் மாநிலத்தில், வதோதரா மாவட்டத்தின் நவசாரி என்ற ஊரைச் சேர்ந்தவர். தனது 13 வயதில் புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்து 40 ஆண்டுகள் இந்தியப் பத்திரிகை உலகின் சிறந்த புகைப்பட நிருபராக பணியாற்றி 1970-ம் ஆண்டில் ஓய்வு பெற்றார். 2011 ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசு பத்ம பூசன் விருது வழங்கியது.[1]

சாதனைகள்[தொகு]

  • 1942-ம் ஆண்டு டில்லியில், பிரித்தானிய தகவல் தொடர்பு (பி.ஐ.எஸ்) சேவையில் புகைப்பட நிருபராக பணியாற்றினார்.
  • இந்தியா சுதந்திரம் அடையும் முன்பே, அப்போதைய ஆங்கிலேயர்கள், மற்றும் இந்திய தலைவர்களின் பேச்சுக்கள், பொதுக்கூட்டங்களில், புகைப்பட நிருபராக பணியாற்றினார்
  • இந்தியா சுதந்திரம் அடைந்து 1947 ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் தேசிய ‌கொடி ஏற்றப்பட்டதை புகைப்படம் எடுத்த பெருமைக்குரியவரானார்.
  • இந்தியாவின் கடைசி வைசிராய் மவுண்ட்பேட்டன் பிரபு. ஜவஹர்லால் நேரு சந்திப்பினை புகைப்படம் எடுத்த பெருமையும் இவரைச் சாரும்.

பெற்ற விருதுகள்[தொகு]

2011 சனவரி மாதம் இவருக்கு பத்மவிபூசன் விருது வழங்கப்பட்டது.

மறைவு[தொகு]

சனவரி 15 2012இல் தனது வீட்டு கட்டிலிலிருந்து கீழே விழுந்ததில், இடுப்பு எலும்பு முறி்ந்தது. சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். இறக்கும் பொது இவருக்கு வயது 98.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓமாயி_வியாரவாலா&oldid=2227957" இலிருந்து மீள்விக்கப்பட்டது