திருவட்டத்துறை தீர்த்தபுரீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவட்டத்துறை தீர்த்தபுரீசுவரர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருநெல்வாயில் அரத்துறை, நெல்வாயில் அருத்துறை
அமைவிடம்
ஊர்:திருவட்டத்துறை
மாவட்டம்:கடலூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:தீர்த்தபுரீஸ்வரர், ஆனந்தீஸ்வரர்
வரலாறு
தொன்மை:1000-2000 வருடங்களுக்கு முன்

திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் கோயில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிவாலயமாகும். இக் கோவில் அப்பர், சம்பந்தர், சுந்தரர், ஆதிசங்கரர், குகை நமச்சிவாயர், ராமலிங்க அடிகள் ஆகியோரால் பாடல்பெற்றது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும்.

அமைவிடம்[தொகு]

இவ்வூர் திருநெல்வாயில் அரத்துறை என்றும், திருவரத்துறை என்றும், திருவட்டுறை என்றும் அழைக்கப்படுகிறது. கோயிலானது தொழுதூர் விருத்தாச்சலம் பேருந்து சாலையில் தொழுதூரிலிருந்து 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. [1]

இறைவன், இறைவி[தொகு]

இங்குள்ள இறைவன் ஆனந்தீசுவரர் என்றும் தீர்த்த புரீசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி ஆனந்தநாயகி, திரிபுரசுந்தரி, அரத்துறைநாயகி என்று அழைக்கப்படுகிறார். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009


இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]