திருவேட்களம் பாசுபதேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவாரம் பாடல் பெற்ற
திருவேட்களம் பாசுபதேசுவரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருவேட்களம், மூங்கில்வனம்
பெயர்:திருவேட்களம் பாசுபதேசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:திருவேட்களம்
மாவட்டம்:கடலூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:பாசுபதேசுவரர் பாசுபதநாதர்
தாயார்:நல்லநாயகி, சற்குணாம்பாள்
தல விருட்சம்:மூங்கில்
தீர்த்தம்:நள தீர்த்தம், கிருபா தீர்த்தம்
சிறப்பு திருவிழாக்கள்:வைகாசி விசாகம், ஆனி திருமஞ்சனம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, மகா சிவராத்தரி, பங்குனி உத்திரம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், அருணகிரி நாதர்
வரலாறு
தொன்மை:1000-2000 வருடங்களுக்கு முன்
அமைத்தவர்:சோழர்கள்

பாசுபதேசுவரர் கோயில் திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துளள 2வது சிவத்தலமாகும்.

அமைவிடம்[தொகு]

இத்தலம் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள திருவேட்களம் எனும் ஊரில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இது 2வது சிவத்தலமாகும்.

இறைவன்,இறைவி[தொகு]

இத்தலத்தின் மூலவர் பாசுபதேஸ்வரர், தாயார் நல்லநாயகி (சமஸ்கிருதம்:சத்குணாம்பாள்). இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தின் தலவிருட்சமாக மூங்கில் மரமும், தீர்த்தமாக கிருபா தீர்த்தமும் அமைந்துள்ளது.

சிறப்புகள்[தொகு]

சம்பந்தர் இங்கிருந்து சிதம்பரத்தைத் தரிசித்தார் எனப்படுகிறது. அர்ச்சுனனுக்கு பாசுபதம் தந்தருளிய தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்)[1]. நடராசர் முருகனாகவும் முருகன் நடராசராகவும் தோன்றிய தலமாகக் கூறுவார்கள்[2].

இவற்றையும் பார்க்க[தொகு]

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. தேவாரம் தளம்
  2. தினமலர் குறிப்பு

வெளி இணைப்புகள்[தொகு]