ஆதியூர் அவதானி சரிதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆதியூர் அவதானி சரிதம் என்பது தமிழில் செய்யுள் வடிவில் வெளியிடப்பட்ட முதலாவது புதினம் ஆகும்.[1] இந்நூலை சென்னை புரசைவாக்கம் வித்துவான் தூ. வீ. சேஷையங்கார் என்ற பேராசிரியர் 1875 ஆம் ஆண்டில் எழுதினார். இந்துக்களுள் காணப்படும் குணா குணங்களையும் நடைகளையும் வருணித்து இப்புதினத்தை அவர் எழுதினார்.

மீள் பதிப்பு[தொகு]

சிட்டி சுந்தரராசன். சோ. சிவபாதசுந்தரத்துடன் இணைந்து இந்நூலைக் கண்டுபிடித்து 1994 ஆம் ஆண்டில் வரலாற்று முறையிலான முன்னுரை எழுதி வெளியிட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதியூர்_அவதானி_சரிதம்&oldid=1439388" இலிருந்து மீள்விக்கப்பட்டது