வலைவாசல்:சைவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


சைவ வலைவாசல்
.

அறிமுகம்

ஓம்
ஓம்

சிவபெருமானுடன் சம்மந்தமான அனைத்தும் சைவம் என்று அறியப்பெறுகிறது. சைவநெறியென்றும், சிவநெறியென்றும், சிவ வழிபாடென்றும் சைவ சமயம் வழங்கப்பெறுகிறது. சிவவழிபாடு தமிழர்களின் குறிஞ்சி நிலத்தெய்வமான சேயோன் வழிபாட்டிலிருந்து தோன்றியதாகும். ஆதி சைவம், வீர சைவம், சித்தாந்த சைவம் என பல வகை பிரிவுகளை உள்ளடக்கிய இச்சமயம், இந்து மதத்தின் வைணவம், சாக்தம், கௌமாரம், காணாபத்தியம் முதலிய இந்து சமயப்பிரிவுகளையும் தன்னுள் இணைத்துக் கொண்டது. கல்லாடம் எனும் நூல் மூலம் முதல் தமிழ்ச்சிற்றிலக்கியத்தை தோற்றுவித்தது, பக்தி இலக்கிய காலத்தில் நாயன்மார், சமயக்குரவர் போன்றோரின் எழுச்சியால் எண்ணற்ற சைவ இலக்கியத்தினை படைத்தது என்று சைவம் தமிழுக்கு ஆற்றிய தொண்டால் 'சைவத்தமிழ்' என்று அழைக்கப்பெறுகிறது.

சைவ சமயம் பற்றி மேலும் அறிய...

சிறப்புக் கட்டுரைகள்

திருவைந்தெழுத்து
சைவ சமயத்தின் மூல மந்திரம் "நமசிவாய" எனும் திருவைந்தெழுத்து ஆகும்.இது பஞ்சாட்சர மந்திரம் எனவும் அழைக்கப்படும். சிவாயநம எனவும் இதனைக் கொள்வர். சிவாயநம என்பது சிவபெருமானைப் போற்றிப் பாடும் மந்திரச் சொல்லாக உள்ளது. இதற்குப் பல பொருள் உண்டு என்று இந்து சமயத்தில் சைவ சமயத்தைக் கடைப்பிடிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

யசுர் வேதத்திலே நான்காவது காண்டத்திலே சிவ பிரானைப் போற்றும் உருத்திர மந்திரம் உள்ளது. அதில் சூத்திரம் 8-1 நமசிவாய எனும் ஐந்தெழுத்து பற்றிக் கூறுகிறது. வேத மந்திரத்தை முறைப்படி தீட்சை பெற்றுத்தான் ஓத வேண்டும் என்பது விதி. ஆனால் சதா காலமும் அனைவரும் ஓதக்கூடிய மந்திரமாகத் 'திருவைந்தெழுத்து' கூறப்படுகிறது.



சைவ அடியார்கள்

உமாபதி சிவாச்சாரியார்
உமாபதி சிவாச்சாரியார் என்பவர் சந்தான குரவர்களில் இறுதியானவராவர். இவர் தீட்சிதர் அல்லாதவரான ஒருவரைத் தனது குருவாகக் கொண்டனால் தில்லைவாழ் அந்தணர்கள் கோயிலில் பூசை செய்யும் உரிமையை மறுத்தனர். ஆனால் கோயிலில் கொடியேற்ற வெறொரு அந்தணர் முயன்றபொழுது, கொடி ஏறவில்லை. உண்மை உணர்ந்த அந்தணர்கள் உமாபதி சிவத்தை சரணடைந்தனர். உமாபதியாரும் கொடிக்கவி என்ற நான்கு பாடல்களைப் பாடி ஏறாதிருந்த கொடியை ஏற்றி வைத்தார்.

அத்துடன் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த பெற்றான் சாம்பனுக்கு முத்தி அளித்தவர். மெய்கண்ட சாத்திரங்களுள் அடங்கும், சிவப்பிரகாசம், திருவருட் பயன், வினா வெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் என்னும் எட்டு நூல்கள் இவரால் இயற்றப்பட்டவை. இவை தவிற சேக்கிழார் புராணம், கோயிற் புராணம் , திருமுறை கண்ட புராணம், திருப்பதிக் கோவை முதலியவைகளையும் இயற்றியுள்ளார். பௌஷ்கராகமத்துக்கு, வடமொழி நூல்களான பௌஷ்கர சங்கிதா பாஷ்யம் என்பவைகளுக்கு தெளிவுரையும் எழுதியுள்ளார்.


சிறப்புப் படம்

[[Image:|350px|சிவ அடையாளங்கள்]]

சிவபெருமான் நெற்றிக்கண் உடையவராகவும், வாசுகி பாம்பினை கழுத்தில் ஆபரணமாக தரித்தவராகவும், சடாமுடியில் பிறையையும், கங்கையையும் கொண்டவராகவும் அடையாளப்படுத்தப்படுகிறார். இந்த அடையாளங்கள் சிவபெருமானது சிலைகளிலும், ஓவியங்களிலும், சைவ நூல்களிலும் குறிப்பிடப்படுகின்றன.

படம்:
தொகுப்பு



பகுப்புகள்

சைவ சமய பகுப்புகள்

உங்களுக்குத் தெரியுமா?

கைநரம்பில் யாழ் அமைத்து பாடும் இராவணன்
கைநரம்பில் யாழ் அமைத்து பாடும் இராவணன்
  • ஐந்து முகம் கொண்ட சிவபெருமானின் ஆறாவது முகம் அதோமுகம் என்று அழைக்கப்படுகிறது. குருமூர்த்தியின் கோலத்தில் நான் முனிவர்களுக்கு காட்சி தந்த போதும், சூரபதுமன் என்பவனை அழிக்க முருகனை தோற்றுவிக்கும் போதும் மட்டும் இந்த ஆறாவது முகம் வெளிப்பட்டது.
  • சிவபெருமானின் அருவ வடிவம் லிங்க மூர்த்தியாகும். இம்மூர்த்தியின் வடிவம் சக்தி, பிரம்மா, விஷ்ணு, ருத்திர வடிவங்களை தனக்குள் உள்ளடக்கியதாகும்.
  • இசைக்கலையில் வல்லவரான இராவணன் கைநரம்புகளிலேயே யாழ் அமைத்து இசைத்து சிவபெருமானை மயங்க செய்தவர்.
  • சோமவார விரதம், திருவாதிரை விரதம், உமாகேசுவர விரதம், சிவராத்திரி விரதம், பிரதோஷ விரதம், கேதார விரதம், ரிஷப விரதம், கல்யாணசுந்தர விரதம், சூல விரதம் என ஒன்பது விரதங்கள் சிவனுக்கு உகந்ததாக நம்பப்படுகிறது.
  • ஒட்டக்கூத்தர் இயற்றிய குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழ் என்ற சைவச்சிற்றிலக்கிய நூலே தமிழில் தோன்றிய முதல் பிள்ளைத்தமிழ் நூலாகும்.
  • தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள் இருநூற்று இருபத்து நான்காகும்.


தொடர்பானவை

தொகு  

சைவம் பற்றி சான்றோர் கூறியமை


“சைவப் பெருமைத் தனிநாயகன் நந்தி, உய்ய வகுத்த குரு நெறி ஒன்று உண்டு, தெய்வச் சிவ நெறி சன்மாக்கம்சேர்ந்துய்ய, வையத்துள்ளார்க்கு வகுத்து வைத்தானே - திருமூலர்


தொகு  

விக்கித்திட்டங்கள்


தாய்த் திட்டம்
இந்து சமயம்
விக்கித்திட்டம்
முதன்மைத் திட்டம்
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்/இலக்கியம்
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்/தத்துவங்கள்
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்/தொண்டர்கள்



தொகு  

நீங்களும் பங்களிக்கலாம்


நீங்களும் பங்களிக்கலாம்


தொகு  

தொடர்புடைய வலைவாசல்கள்


இந்து சமயம்இந்து சமயம்
இந்து சமயம்
வைணவம்வைணவம்
வைணவம்
சாக்தம்சாக்தம்
சாக்தம்
கௌமாரம்கௌமாரம்
கௌமாரம்
சௌரம்சௌரம்
சௌரம்
காணாபத்தியம்காணாபத்தியம்
காணாபத்தியம்
இந்து சமயம் வைணவம் சாக்தம் கௌமாரம் சௌரம் காணபத்தியம்
தொகு  

பிற விக்கிமீடிய திட்டங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:சைவம்&oldid=3783252" இலிருந்து மீள்விக்கப்பட்டது