வலைவாசல்:தமிழிலக்கியம்/இலக்கியவாதிகள்/22

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரா. பெருமாள் ராசு

இரா. பெருமாள் ராசு (பிறப்பு: நவம்பர் 19, 1931) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு கவிஞர், எழுத்தாளர், ஓவியர், ஆன்மீகச் செல்வர் மற்றும் தற்காப்புக் கலை வித்தகரும் ஆவார். லெனின் நூற்றாண்டு விழா ஓவியப் போட்டியில் முதல் பரிசு பெற்று இந்திய - ரஷ்யக் கலாசாரக் குழுவுடன் உருசியா சென்றுவர தேர்ந்து எடுக்கப்பட்டவர். தமிழ் நாடு மாநிலம் கிருஷ்ணகிரி மாவட்டம் கருமலை என்றழைக்கப்படும் கிருஷ்ணகிரியில் 1931-ல் பிறந்து, ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கினார் இரா. பெருமாள் ராசு. இவருடைய மனைவியின் பெயர் மகாலட்சுமி. தனிப்பட்ட முறையில் பல ஆண்டுகள் திருக்குறள் வகுப்புகளையும், 1967-ல் திருக்குறள் மாநாட்டையும் நடத்தி குன்றக்குடி அடிகளார், கி. வா. ஜ, கி. ஆ. பெ. விசுவநாதம், திருக்குறள் வீ. முனிசாமி போன்ற அறிஞர் பெருமக்களை அழைத்துப் பெருமைப்படுத்தியவர். பேராசிரியப் பெருமக்களையும் துறை சார்ந்த வல்லுனர்களையும் அழைத்து, கவியரங்கம், ஆய்வரங்கம், பட்டிமன்றம், வழக்காடு மன்றம், நடத்திவருகிறார். 'ஆனந்த பரவசம்' என்ற ஆன்மீக மாத இதழின் 'கௌரவ' ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.