யுனெஸ்கோ/கிலெர்மோ கானோ உலக பத்திரிகை சுதந்திர விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யுனெஸ்கோ/கிலெர்மோ கானோ உலக பத்திரிகை சுதந்திர விருது (UNESCO/Guillermo Cano World Press Freedom Prize), என்பது உலக அமைதிக்காகவும், பேச்சுச் சுதந்திரத்திற்காகவும் மற்றும் பத்திரிக்கை தர்மத்தினூடாகவும் பல இன்னல்களைத் தாண்டிப் போராடிய பத்திரிகையாளர், அமைப்பு, அல்லது ஒரு நிறுவனத்திற்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் யுனெஸ்கோ விருதாகும். இவ்விருது 1997 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

அமெரிக்க டாலர் 45,000 பரிசு உலகப் பத்திரிகை சுதந்திர நாளான மே 3 ஆம் நாள் ஆண்டு தோறும் எல் எசுப்பட்டாடோர் என்ற கொலம்பிய நாளிதழின் ஆசிரியர் கிலெர்மோ வானோ இசாசா என்பவரின் நினைவாக வழங்கப்படுகிறது. இவர் 1986 டிசம்பர் 17 ஆம் நாள் பொகொட்டாவில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் கொலொம்பியாவில் போதைப் பொருள் கடத்துவோருக்கு எதிராகப் பலமாகக் குரல் கொடுத்து வந்தவர்.

ஆண்டு தோறும், யுனெஸ்கோ நிறுவனத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட 14 சுயாதீன நபர்களைக் கொண்ட குழு ஒன்று அரச சார்பற்ற அமைப்புகளினாலும், யுனெஸ்கோ உறுப்பு நாடுகளினாலும் பரிந்துரைக்கப்படும் நபர்கள் அல்லது அமைப்புகளில் இருந்து வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்கின்றது.

விருது பெற்றவர்கள்[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "UNESCO awards Ahmet Şık annual press freedom prize". Committee to Protect Journalists. ஏப்ரல் 11, 2014. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 11, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. Ethiopian journalist Reeyot Alemu wins 2013 UNESCO-Guillermo Cano World Press Freedom Prize
  3. "World Press Freedom Day 3 May in Tunis". Afrique en ligne. ஏப்ரல் 24, 2012. 
  4. "Slain Sri Lankan journalist honoured with UN press freedom award". United Nations News Centre. 6 ஏப்ரல் 2009. Archived from the original on 2012-09-13. பார்க்கப்பட்ட நாள் 12 செப்டம்பர் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]