வகையுளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வகையுளி என்பது ஒரு செய்யுளிலக்கணக் குறியீடு.

செய்யுளில் தளை தட்டுப்படாமல் இருக்கச் ஒரே சொல்லைப் பிரித்துச் சீர்நிலை ஆக்கிக்கொள்ளும் முறைமைக்கு வகையுளி என்று பெயர்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். [1] [2]

படரும் பனைஈன்ற மாவும் சுடர்இழை
நல்கியாள் நல்கி யவை [3] [4]

ஒன்றிரண்டு மூன்றுநான் கைந்தாறு [5] வேழெட்டு
ஒன்பது பத்துப் பதினோன்று - பன்னி
ரண்டுபதின் மூன்றுபதின் நான்குபதி னைந்துபதி
னாறுபதி னேழுபதி னெட்டு. [6] [7]

அடிக்குறிப்பு[தொகு]

  1. திருக்குறள் 10
  2. 'இறைவனடி சேராதார்' என்பது இங்கு உள்ளபடி இந்தக் குறள் வெண்பாவில் வகையுளி செய்யப்பட்டுள்ளது.
  3. நல்கியவை என்னும் சொல் வகையுளி செய்யப்பட்டுள்ளது.
  4. கலித்தொகை 138-12
  5. ஆறு என்னும் குற்றியலுகரம் இங்கு முற்றியலுகரமாக எடுத்தாளப்பட்டுள்ளது
  6. காளமேகப் புலவர் பாட்டு
  7. எண்களின் பெயர்கள் வகையுளி செய்யப்பட்டுள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வகையுளி&oldid=1411857" இலிருந்து மீள்விக்கப்பட்டது