சின்ன சாத்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சின்ன சாத்தன் (பிறப்பு: ஜனவரி 23, 1952) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். கோயம்புத்தூர் மாவட்டம் சூலூரில் வசித்து வரும் இவர் இளம் அறிவியலில் பட்டம் பெற்றிருக்கிறார். கலால் துறையில் கண்காணிப்பாளராகப் பணியாற்றியவர். மானிடவியல் மற்றும் Bird Watching Book எனும் ஆங்கில நூல் உள்ளிட்ட இரு நூல்களையும், இரு கவிதைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய "இமயவலம்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் பயண இலக்கியம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்ன_சாத்தன்&oldid=3614079" இலிருந்து மீள்விக்கப்பட்டது