ஆர். சாமுவேல் செல்வராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆர். சாமுவேல் செல்வராஜ் (பிறப்பு: ஏப்ரல் 10, 1964) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். முனைவர் பட்டம் பெற்ற இவர் கும்பகோணம் அரசினர் தன்னாட்சிக் கல்லூரியில் இயற்பியல் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். இவர் ப. ஐயம்பெருமாள் என்பவருடன் சேர்ந்து எழுதிய "விந்தைமிகு பேரண்டம்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் கணிதவியல்,வானியல்,இயற்பியல்,வேதியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._சாமுவேல்_செல்வராஜ்&oldid=3055541" இலிருந்து மீள்விக்கப்பட்டது