சிந்துப் பிரபந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிந்துப் பிரபந்தம், 13 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல்களில் ஒன்று. இந்த நூல் இப்போது கிடைக்கவில்லை. காஞ்சிபுரம் வரதராசப் பெருமாள் கோயில் கல்வெட்டு [1] ஒன்று இந்த நூலைக் குறிப்பிடுகிறது. திருவாழி பரப்பினான் கூத்தன் [2] என்பவன் இந்த நூலைப் பாடி, அதற்குப் பரிசாகப் பொத்தம்பி நாட்டு அரசனிடமிருந்து வள்ளுவப் பாக்கம் என்ற ஊரை முற்றுட்டாகப் பெற்றான் என்று அந்தக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

மதுராந்தகப் பொத்தம்பிச் சோழன் என்பவன் பவணந்தி முனிவரைப் பேணிய சீயகங்கன் என்பவனின் அம்மான். [3] இவன் ‘திருவாழி பரப்பினான் சந்தி’ என்னும் பெயரில் திருநீர்மலை கோயிலுக்கு நிலம் வழங்கித் திருப்பணிகள் செய்தவன் என வேறு கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. எனவே இந்தச் சோழன் இந்த நூலுக்கு ஊரைப் பரிசாக வழங்கியவன் எனக் கொள்ளப்படுகிறது.

கருவிநூல்[தொகு]

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு[தொகு]

  1. கி.பி. 1237 இது மூன்றாம் இராசராசனின் 21 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு.
  2. திருவாழி என்னும் சக்கரத்தைக் கையில் கொண்டுள்ள திருமாலின் புகழைப் பரப்பினான் என்பது இதன் பொருள்.
  3. தாய்வழி மாமன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்துப்_பிரபந்தம்&oldid=1297655" இலிருந்து மீள்விக்கப்பட்டது