மருதூர் அரங்கராசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மருதூர் அரங்கராசன் (பிறப்பு: திசம்பர் 9, 1952) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். ச. அரங்கராசன் எனும் இயற்பெயருடைய இவர் தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர். நெய்வேலி ஜவஹர் அறிவியல் கல்லூரியின் முதல்வர். ஆராய்ச்சி தொடர்பான 7 நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய "யாப்பறிந்து பாப்புனைய" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மருதூர்_அரங்கராசன்&oldid=3614068" இலிருந்து மீள்விக்கப்பட்டது