தி. ச. சின்னத்துரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தி. ச. சின்னத்துரை (Thirugnana Sampanthar Sinnathuray, செப்டம்பர் 22, 1930 - சனவரி 16, 2016), சிங்கப்பூர் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆவார். இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் சட்டம் பயின்றார். சிங்கப்பூர் திரும்பிய பின், வழக்குரைஞராக பயிற்சி பெற்றார். சிங்கப்பூர் பிரதமர் இவரை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமித்தார்.[1]. இவருடன் சேர்த்தே அன்றுவரை ஆறு நீதிபதிகளே பதவியில் இருந்தனர். பின்னர் நிலக் கையகப்படுத்தலுக்கான உயர் ஆணையராக நியமிக்கப்பட்டார். சிங்கப்பூர் இராணுவ நீதிமன்றத்தின் அதிபராகவும் இருந்துள்ளார். பொதுத் தொண்டு ஆர்வலர் விருதினை சிங்கப்பூர் பிரதமர் இவருக்கு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 'Appointment of High Court Judge', Singapore government Press Release (Document No. 1210-1978-09-21; dated 21 September 1978)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி._ச._சின்னத்துரை&oldid=3861000" இலிருந்து மீள்விக்கப்பட்டது