திருவேங்கடம் (எழுத்தாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேங்கடம் என்கிற திருவேங்கடம் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். வந்தவாசியைச் சேர்ந்த இவர் சாவி (எழுத்தாளர்) நடத்திய சாவி இதழின் கடைசி மூன்றாண்டு காலத்தில் உரிமையாளர் மற்றும் பதிப்பாளராக இருந்தார். பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் எழுதிய “வான சாஸ்திரம்” நூல் சிறப்பு பெற்றது. இவர் எழுதிய “அடேங்கப்பா ஐரோப்பா” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் பயண இலக்கியம் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்[தொகு]