பேராசிரியர் (யாப்பருங்கல விருத்தி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யாப்பருங்கலம் என்னும் யாப்பிலக்கணம் பற்றிய நூலுக்கு விருத்தியுரை ஒன்று உண்டு. அதனை யாப்பருங்க விருத்தி என்றே குறிப்பிடுவர். அந்த நூலில் சில மேற்கோள்கள் பேராசிரியர் என்னும் ஒருவர் பெயரைச் சுட்டுகின்றன.

  • பிறைநெடுமுடிக் கறைமிடற்றனார் பெயர் மகிழ்ந்த பேராசிரியர்
  • நீர் மலிந்த வார்சடையோன் பேர் மகிழ்த போராசிரியர்
  • பெண்ணொரு பாகன் பெயர் பகிழ்ந்த பேராசிரியர்
  • காமவேளைக் கறுத்த புத்தேள் நாமம் தாங்கிய நல்லாசிரியர்

என்று இவரது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.[1]

நீர் மலிந்த வார்சடையோன் பேர் மகிழ்த போராசிரியர்

இலக்கணப் பாடல் எடுத்துக்காட்டு

மூவடி ஆகியும் நாலடி ஆகியும்

பாவடி வீழ்ந்து பாடலுள் நடந்தும்
கடிவரைவு இலவாய் அடிதொறும் தனிச்சொல்
திருத்தகு நிலைய விருத்தம் ஆகும் [2]

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு[தொகு]

  1. இவரது பெயர் வரும் சில இடங்களில் மயேச்சுரர் என்று வேறு பாடபேதங்களும் காட்டப்பட்டுள்ளன. மயேச்சுவரம் என்னும் யாப்பிலக்கணம் இயற்றிய புலவர் மயேச்சுரர். இவர் 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர். இந்தப் பேராசிரியர் 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உரையாசிரியர் என மு. அருணாசலம் தெளிவுபடுத்துகிறார்.
  2. அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம் - பழைய விருத்தி உரை - வித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை பதிப்பு - சென்னை அரசு அச்சகம் - 1960 - பக்கம் 205