இரோசி யமாசிடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேரா. இரோசி யமாசிடா
பிறப்புயப்பான்
பணிபேராசிரியர்
வலைத்தளம்
www.rpip.tohoku.ac.jp

இரோசி யமாசிடா (Prof. Hiroshi Yamashita) என்பவர் யப்பான் நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழ்ப் பேராசிரியர் ஆவார். [1] இவர் தமிழ் மொழியை சரளமாக பேசக்கூடியவரும் ஆவார். இந்திய மொழிகள் பற்றிய ஆய்வினைச் செய்ய இந்தியா சென்று அங்கே சமசுகிருதம் கற்ற இவர், திராவிட மொழிகள் பற்றி ஆய்வினைச் செய்யும் பொழுது, தமிழ் மொழியின் தொன்மையறிந்து, அதன்மேல் பற்றுக்கொண்டு தமிழ் மொழியை சிறப்பாகக் கற்றவராவர். அத்துடன் தமிழ் மொழியின் ஒலிப்புகளுக்கும் யப்பானிய மொழி ஒலிப்புக்களுக்கும் இடையிலான வேறுபாடுகளையும் ஆய்வு செய்தவராவர்.[2]

தமிழ்ப் பணிகள்[தொகு]

தமிழ் மொழி தொடர்பான பல்வேறு பணிகளையும் செய்து வரும் இவர், உலகின் பல நாடுகளுக்கு பயணித்து தமிழ் மொழி சார்ந்த நிகழ்வுகளில் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றியும் வருகிறார். அத்துடன் தமிழில் நூல்களை எழுதியும், தமிழ் நாவல்களை யப்பானிய மொழிக்கு மொழிமாற்றம் செய்தும் வருகிறார். அவற்றில் சில தமிழ் நாவல்கள் யப்பானிய மொழியில் வானொலி நாடகங்களாக இடம்பெற்றுள்ளதான தகவல்களும் அறியக்கிடைக்கின்றன. [3]

சான்றுகோள்கள்[தொகு]

  1. "Professor Hiroshi Yamashita". Archived from the original on 2008-09-28. பார்க்கப்பட்ட நாள் 2012-12-17.
  2. Japanese Professor Speaks Tamil
  3. "He has even written Tamil books and translated many Tamil novels into Japanese. Some of these novels have also been turned into radio dramas in Japanese". Archived from the original on 2008-09-28. பார்க்கப்பட்ட நாள் 2012-12-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரோசி_யமாசிடா&oldid=3544357" இலிருந்து மீள்விக்கப்பட்டது