புதுமைப்பித்தன் சிறுகதைகள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதுமைப்பித்தன் சிறுகதைகள்
புதுமைப்பித்தன் சிறுகதைகள்
நூலாசிரியர்மீ. ப. சோமசுந்தரம்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வகைசிறுகதைத் தொகுப்பு
வெளியீட்டாளர்நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா
வெளியிடப்பட்ட நாள்
1976 (முதல் பதிப்பு)
ISBN81-237-0585-9

புதுமைப்பித்தன் சிறுகதைகள் என்னும் நூல் ஒரு சிறுகதைத் தொகுப்பாகும். இந்நூலின் தொகுப்பாசிரியர் மீ. ப. சோமசுந்தரம். இத்தொகுப்பு புதுமைப்பித்தனின் 16 சிறுகதைகளைக் கொண்டுள்ளது. நேஷனல் புக் டிரஸ்ட் டிரஸ்ட், இந்தியா இதனை வெளியிடப்பட்டுள்ளது. இதன் முதல் பதிப்பு 1976 ஆம் ஆண்டு வெளியானது.

இரண்டாவது பக்கத்தில் புதுமைப்பித்தனைப் பற்றிய குறிப்பும், அதைத் தொடர்ந்து தொகுப்பாசிரியரின் முன்னுரையும் அமைந்துள்ளன. முன்னுரையில் புதுமைப்பித்தனின் எழுத்துலக வரலாறும் அவரது எழுத்து நடை குறித்த விமரிசனங்களும், அவரது சிறுகதைகள் குறித்து புதுமைப்பித்தனின் கூற்றுக்களும் அவை குறித்த தொகுப்பாசிரியரின் கருத்துக்களும் இடம்பெற்றுள்ளன.

முன்னுரையைத் தொடர்ந்து வரிசையாக 16 சிறுகதைகளும் தரப்பட்டுள்ளன.

புதுமைப்பித்தனின் சிறுகதைகளின் தொகுப்புகள் பல, வெவ்வேறு ஆசிரியர்களால் தொகுக்கப்பட்டு வெவ்வேறு பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளன.

இடம்பெற்றுள்ள சிறுகதைகள்[தொகு]

  1. சாப விமோசனம்
  2. பால்வண்ணம் பிள்ளை
  3. ஞானக்குகை
  4. உபதேசம்
  5. அன்று இரவு
  6. வாடாமல்லிகை
  7. கருச்சிதைவு
  8. ஒருநாள் கழிந்தது
  9. பொன்னகரம்
  10. நினைவு ப் பாதை
  11. நியாயம்
  12. சிற்பியின் நகரம்
  13. காஞ்சனை
  14. வார்ப்புரு:கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்
  15. சாமியாரும் குழந்தையும் சீடையும்

இவற்றையும் காண்க[தொகு]