கூர்ம சம்ஹார மூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவ வடிவங்களில் ஒன்றான
கூர்ம சம்ஹார மூர்த்தி
மூர்த்த வகை:
64 சிவவடிவங்கள்
விளக்கம்: வேடுவக் கோலம்
இடம்: கைலாயம்
வாகனம்: நந்தி தேவர்

கூர்ம சம்ஹார மூர்த்தி, அறுபத்து நான்கு சிவ திருமேனிகளுள் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகும். கூர்மம் என்றால் ஆமை என்று பொருள். கூர்ம வடிவெடுத்து வந்த விஷ்ணுவை அழித்த சிவபெருமானின் திருவுருவம் கூர்ம சம்ஹார மூர்த்தி என்று அழைக்கப்படுகிறது.

சொல்லிலக்கணம்[தொகு]

வேறு பெயர்கள்[தொகு]

தோற்றம்[தொகு]

உருவக் காரணம்[தொகு]

அமிர்தம் கிடைக்க வேண்டி அரக்கர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடைந்த போது, மந்திர மலையைத் தாங்கியபடி ஆமை ரூபத்தில் விஷ்ணு நின்றார். அப்பணி முடிந்ததும், கடல் உயிரினங்கள் அனைத்தையும் தின்ற ஆமை, நீரையும் குடித்தது. தேவர்களும், மனிதர்களும் அஞ்சினார்கள். சிவபெருமானிடம் தங்களைக் காக்க வேண்டிக் கொண்டார்கள். அவர்களுக்கு உதவும் பொருட்டு ஆமையை தன்னுடைய சூலத்தினால் குத்தி அதிலிருந்த சதைகளை எடுத்தெறிந்தார். ஆமையோட்டினைத் தன்னுடைய கழுத்திலிருந்த மாலையில் இணைத்துக் கொண்டார்.

இந்த திருவுருவக் கோலம் கூர்ம சம்ஹார மூர்த்தி என்று வழங்கப்படுகிறது.

கோயில்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூர்ம_சம்ஹார_மூர்த்தி&oldid=1629701" இலிருந்து மீள்விக்கப்பட்டது