மாவட்டக் கல்வி அதிகாரி
மாவட்டக் கல்வி அதிகாரி என்பவர் தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும், வருவாய்க் கோட்ட அளவில் பிரிக்கப்பட்டுள்ள கல்வி மாவட்டத்தின் தலைமை அதிகாரியாவார். இவர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் துணையுடன் பள்ளிக் கல்வி மேம்பாட்டிற்கான பணிகளை மேற்கொளகிறார்.