ஏ. எம். வைஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏ. எம். வைஸ் இலங்கை முஸ்லிம் ஊடகவியலாளரும், எழுத்தாளரும். மத்திய மலைநாட்டின் தலைநகர் கண்டிக்கருகில் அமைந்துள்ள உடத்தலவின்னை எனும் கிராமத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இவர் ஓர் இலக்கிய ஆர்வலரும், ஆய்வாளரும், சட்டத்தரணியுமாவார். தற்போது இலங்கை தேசிய சேமிப்பு வங்கியின் மாவட்ட சட்ட ஆலோசகராக பணியாற்றி வருகின்றார்.

நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியுள்ள இவர் இலங்கையில் முன்னணி சமூக சேவை இலக்கிய ஊடக அமைப்புகளில் பொறுப்பு வாய்ந்த பல பதவிகளை வகித்து வருகின்றார். இவரின் ஆக்கங்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகளிலும், சிற்றேடுகளிலும் பிரசுரமாகி வருகின்றன. சுயாதீன ஊடகவியலாளரான இவர் இலங்கையின் தேசிய வாராந்த பத்திரிகைகளில் ஒன்றான நவமணி மற்றும் செய்தி மலர் போன்றவற்றில் ஊடகவியலாளராக பணியாற்றி வருகின்றார்.

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._எம்._வைஸ்&oldid=2716410" இலிருந்து மீள்விக்கப்பட்டது