சேரலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேரநாட்டு மக்கள் சேரலர்.

சுள்ளியம் பேரியாறு பாய்ந்த சேர்ப்பு [1] நாடே நேரநாட்டின் தலைமைப் பகுதி. [2]

இதன் வேந்தன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், ‘சேரலர் வேந்து’ எனப் பாராட்டப்படுகிறான். [3]

கொங்கு நாட்டுக் கருவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட செல்வக்கடுங்கோ வாழியாதன் ‘சேரலர் மருகன்’ எனப் பாராட்டப்படுகிறான். [4] மருகன் என்றால் மரபில் வந்தவன் என்பது பொருள்.

காரி ஓரியைக் கொன்று கொல்லி நாட்டைச் சேரலர்க்கு ஈந்தான். [5]

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்னும் பெயரில் உள்ள ‘சேரல்’ என்னும் பெயரே இவன் சேரலர் பெருமான் என்பதை விளக்குகிறது.

இவற்றையும் காண்க[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. கடலும் நிலமும் சேரும் கடற்கரை
  2. சேரலர் சுள்ளியம் பேரியாற்று வெண் நுரை கலங்க, யவனர் தந்த வினைமாணு நன்கலம் - அகநானூறு 149-7,
  3. பதிற்றுப்பத்து 38-8,
  4. பதிற்றுப்பத்து 63-16
  5. அகநானூறு 209-14
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேரலர்&oldid=1106397" இலிருந்து மீள்விக்கப்பட்டது