அ. க. லோகிததாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அ. க. லோகிததாஸ்
A. K. Lohithadas
பிறப்புஅம்பழத்தில் கருணாகரன் லோகிததாஸ்
(1955-05-10)மே 10, 1955
சாலக்குடி,
கேரளம், இந்தியா
இறப்புசூன் 28, 2009(2009-06-28) (அகவை 54)
கொச்சி, கேரளம், இந்தியா
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்லோகி
குடியுரிமைஇந்தியா
பணிமலையாளத் திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர்
செயற்பாட்டுக்
காலம்
1987–2009

அ. க. லோகிததாசு (அம்பலத்தில் கருணாகரன் லோகிததாஸ்) அல்லது ஏ. கே. லோகிததாஸ் மலையாளத் திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் 1985ஆம் ஆண்டு 'சிந்து சாந்தம் ஆகி ஒழுகுனு' என்ற நாடகத்தின் மூலம் மாநில அரசு விருதோடு தன் கலை உலக வாழ்க்கையைத் துவங்கியவர்[1]. "தனியாவர்த்தனம்" படம் மூலம் திரைக்கதையாசி‌ரியர் ஆனார். இப்படத்தில் ஒரு சாதாரண மனிதன் சமூகத்தால் எப்படி மனநிலை தவறியவனாக ஆக்கப்படுகிறான் என்பதைத் தனது துல்லியமான திரைக்கதையால் காட்சிப்படுத்தியிருந்தார். இந்தத் திரைப்படம் மம்முட்டியின் திரை வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. இவருடைய படைப்பில் வந்த சில படங்கள், எழுதாபுரங்கள், கிரீடம், முத்ரா, ஹிஸ்ஹைனஸ் அப்துல்லா, பரதம், கமலாதலம், தனம், தசரதம், செங்கோல், பூதக்கண்ணாடி, கண்மதம், காருண்யம், கஸ்தூரி மான், அரையன்னங்களுடவீடு, நைவேத்தியம் போன்றவையாகும்[2].

லோகிததாஸ் மற்றும் இயக்குநர் சிபிமலையில் இருவரும் இணைந்து பல மலையாளத் திரைப்படங்கள் படைத்துள்ளனர். சிபிமலையிலுடன் இவர் சேர்ந்து பணியாற்றிய 'கிரீடம்', 'பரதம்' என அனைத்துப் படங்களும் மிகவும் வெற்றி பெற்றவையாகும். இவர் இதுவரை தனது திரைக்கதைக்காக 14 முறையும், இயக்கத்திற்காக 4 முறையும் பிலிம் கிரிட்டிக் விருதுகளைப் பெற்றுள்ளார். மேலும் இவர் திலீப், மீரா ஜாஸ்மின், மஞ்சுவாரியர் என்று பல்வேறு திறமையாக கலைஞர்களை திரைப்படத் துறைக்கு அறிமுகப்படுத்தினார். இவர் கடைசியாக இயக்கிய ‘நைவேத்தியம்' திரைப்படம்கூட சிறந்த திரைப்படம், சிறந்த கதை ஆகிய பிரிவுகளில் விருதுகளைப் பெற்றது. தமிழில் இவர் கஸ்தூரிமான் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

லோகிததாஸ் மலையாளத்தின் முக்கியமான திரைக்கதையாசிரியர்களில் ஒருவர். எம்.டி.வாசுதேவன்நாயர் .பி.பத்மராஜன் ஆகியோருக்குப்பின் லோகிததாஸ் மலையாளத்தின் மிகச்சிறந்த திரைக்கதையாசிரியர் எனப்படுகிறார். முழுபெயர் அம்பழத்தில் கருணாகரன் லோகிததாஸ் திரிச்சூர் மாவட்டத்தில் உள்ள முரிங்ஙூர் என்ற கிராமத்தில் பிறந்தவர் லோகிததாஸ். எரணாகுளம் மகாராஜாஸ் காலேஜில் பட்டப்படிப்பு முடித்தபின் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரியில் ஆய்வக உதவியாளர் படிப்பை முடித்தார். சிறிதுகாலம்டரசு மருத்துவமனை ஊழியராகப் பணியாற்றினார்.

ஆரம்பத்தில் சிறுகதைகள் எழுதிவந்தார். மலையாள நாடக ஆசிரியரும் இடதுசாரி தலைவருமான தோப்பில் பாசி நடத்திவந்த கெ.பி.ஏ.சி (கேரளா பீப்பிள்ஸ் ஆர்ட் கிளப்) க்காக ஒரு நாடகத்தை 1986ல் லோகிததாஸ் எழுதினார். சிந்து அமைதியாக ஓடுகிறது (சிந்து சாய்தமாய் ஒழுகுந்நு) என்ற அந்நாடகம் பரவலாக கவனிப்பு பெற்றது. அதற்கு மாநில அரசின் சிறந்த நாடகத்துக்கான விருது கிடைத்தது. பிற்பாடு ‘ கடைசியில் வந்த விருந்தாளி (அவசானம் வந்த அதிதி) கனவு விதைத்தவர்கள் (ஸ்வப்னம் விதச்சவர்) போன்ற நாடகங்களையும் எழுதினார்.

நாடக நடிகராக இருந்து சினிமாவில் புகழ் பெற்றிருந்த திலகன் லோகித தாஸை சினிமாவுக்குக் கூட்டிவந்தார். சிபி மலையில் இயக்கிய தனியாவர்த்தனம் லோகிததாஸின் முதல் படம். ஒரு பாரம்பரிய நாயர் குடும்பத்தில் இருந்துவரும் மூடநம்பிக்கைக்குப் பலியாகும் பள்ளி ஆசிரியரைப் பற்றிய அந்தப்படம் மிகப்பரவலான கவனத்தைப் பெற்று லோகிததாஸை பிரபலப்படுத்தியது. 1997ல் பூதக்கண்ணாடி என்ற படத்தை லோகிததாஸ் இயக்கினார். இதுதான் இயக்குநராக அவரது முதல் முயற்சி. லோகிததாஸின் மனைவி பெயர் சிந்து, ஹரிகிருஷ்ணன் விஜயசங்கர் என்று இரு மகன்கள் இருக்கிறார்கள்.

படைப்புகள்[தொகு]

திரைக்கதை எழுதிய படங்கள்[தொகு]

1987 தனியாவர்த்தனம் 1987 எழுதாப்புறங்ஙள் 1988 குடும்பபுராணம் 1988 விசாரண 1988 முக்தி 1989 கிரீடம் 1989 ஜாதகம் 1989 தசரதம் 1989 முத்ர 1989 மஹாயானம் 1990 சஸ்னேகம் 1990 மாலயோகம் 1990 ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா 1990 குட்டேட்டன் 1991 தனம் 1991 பரதம் 1991 அமரம் 1991 கனல்காற்று 1992 வளையம் 1992 கமலதளம் 1992 ஆதாரம் 1992 கௌரவர் 1993 வெங்கலம் 1993 செங்கோல் 1993 வாத்ஸல்யம் 1994 சகோரம் 1994 சாகரம் சாட்சி 1995 ஸாதரம் 1996 சல்லாபம் 1996 தூவல்கொட்டாரம் 1997 பூதக்கண்ணாடி 1997 காருண்யம் 1998 ஓர்மசெப்பு 1998 கன்மதம் 1999 வீண்டும் சில வீட்டுகாரியங்ங்கள் 1999 அரயன்னங்ஙளுடே வீடு 2000 ஜோக்கர் 2001 சூத்ரதாரன் 2003 கஸ்தூரிமான் 2003 சக்ரம் 2006 சக்கரமுத்து 2007 நிவேத்யம்

இயக்கிய படங்கள்[தொகு]

1997 பூதக்கண்ணாடி 1997 காருண்யம் 1998 ஓர்மச்செப்பு 1998 கன்மதம் 2000 அரயன்னங்களுடே வீடு 2000 ஜோக்கர் 2001 சூத்ரதாரன் 2003 கஸ்தூரிமான் 2003 சக்ரம் 2005 கஸ்தூரிமான் [தமிழ்] 2006 சக்கரமுத்து 2007 நைவேத்யம்

நடித்த படங்கள்[தொகு]

1992 ஆதாரம் 1999 வீண்டும் சில வீட்டுகாரியங்ங்கள் 2002 ஸ்டோப் வயலன்ஸ் 2005 தி காம்பஸ் 2005 உதயனாணு தாரம்

தயாரித்தபடம்[தொகு]

2005 கஸ்தூரிமான் [தமிழ்]

பாடல் எழுதிய படங்கள்[தொகு]

2000 ஜோக்கர். பாடல் ‘அழகே நீ பாடும்’ 2000 ஜோக்கர் ‘செம்மானம் பூத்தே’ 2003 கஸ்தூரிமான் ‘ராக்குயில்பாடி 2007 நிவேத்யம் ‘கோலக்குழல் விளி கேட்டுவோ

விருதுகள்[தொகு]

திரைக்கதைக்கான கேரள அரசு விருது தனியாவர்த்தனம் 1987 நல்ல திரைபப்டத்துக்கான கேரள அரசு விருது 1997 மிகச்சிறந்த அறிமுக இயக்குநர் படத்துக்கான தேசிய விருது பூதக்கண்ணாடி 1997

பிலிம் கிரிட்டிக்ஸ் அசோஷியேஷன் விருதுகள் - மிகச்சிறந்த திரைக்கதை[தொகு]

தனியாவர்த்தனம் [1987] தசரதம் [1989] கிரீடம் [1990] பரதம் [1991] செங்கோல் [1993] சகோரம் [1994] சல்லாபம் [1994] தூவல்கொட்டாரம் [1996] பூதக்கண்ணாடி [1997] ஓர்மச்செப்பு [1998] ஜோக்கர்[ 1999] வீண்டும் சில வீட்டுகாரியங்ஙகள் [2000] கஸ்தூரிமான் [2003] நிவேத்யம் [2007]

பிலிம் கிரிட்டிக்ஸ் அசோஷியேஷன் விருதுகள் - மிகச்சிறந்த திரைப்படம்[தொகு]

பூதக்கண்ணாடி [1997] ஜோக்கர்[ 1999] கஸ்தூரிமான் [2003] நிவேத்யம் [2007]

மறைவு[தொகு]

இவர் தன்னுடைய 55ஆம் வயதில் கொச்சியில் 2009 சூன் 28ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார்[3]. இவருடைய மறைவிற்குப் பிறகு பல்வேறு திரைக்கலைஞர்கள் இவரைப் பற்றிக் கூறியவை:

சேரன்[தொகு]

"ஆட்டோகிராஃப் பார்த்துவிட்டு என்னிடம் நட்பாக நெருங்கினார் லோகி. வாழ்வின் அடித்தட்டு மக்களின் மேல் அவர் மிகவும் பரிவு கொண்டு இருந்தார். அவரது வெற்றி பெற்ற திரைக்கதைகளில் அந்தப் பரிவு பளிச்சென்று தெரியும். அவரோடு இணைந்து ஒரு படமாவது செய்ய வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. லோகிததாஸின் மரணம் மொழிகளைக் கடந்து படைப்பாளிகள் அத்தனை பேருக்குமான இழப்பு[1].

கமலகாசன்[தொகு]

இவர் முதல் படத்துக்குத் திரைக்கதை எழுதியதில் இருந்தே 'எனக்கொரு ஸ்கிரிப்ட்டை ரெடி பண்ணிக் கொடுங்கள்' என்று கேட்டுக்கொண்டே இருந்தேன். போன மாதம்கூட 'சந்திப்போமா?' என்று கேட்டு போன் செய்தேன். 'வருகிறேன்' என்றார். சந்திக்காமலேயே விடைபெற்றுவிட்டார். லோகி என்னுடைய நண்பர் எனச் சொல்வது சரியில்லை. அவர் என் நெருங்கிய உறவினர்[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 http://www.vikatan.com/av/2009/jul/08072009/av0704.asp[தொடர்பிழந்த இணைப்பு]
  2. http://truetamilans.blogspot.com/2009/06/blog-post_28.html
  3. http://inioru.com/?p=3563
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._க._லோகிததாசு&oldid=3761716" இலிருந்து மீள்விக்கப்பட்டது