புலன் (நூல்வனப்பு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நூலின் வனப்பு-இயல்புகள் எட்டு எனத் தொல்காப்பியர் பகுத்துக் காட்டுகிறார். அவற்றில் புலன் என்பது ஒன்று. [1]

தெளிவாகப் புலப்படும் மொழிநடையில் செய்யப்படும் நூல் புலன்-வனப்பு-நூல்.

பேராசிரியர்
‘சேரி மொழியால்’ என இந்த நூற்பாவினுக்குப் பாடம் கொள்கிறார்.

சேரிமொழி என்பது ‘பாடிமாற்றங்கள்’ என்கிறார்.
இது ஊர்மக்கள் பேசும் மொழி.
‘விளக்கத்தார் கூத்து முதலாகிய நாடகச் செய்யுளாகிய வெண்டுறைச் செய்யுள்’ எனப் புலன்-வனப்பு நூலுக்கு எடுத்துக்காட்டும் தருகிறார்.

இவற்றையும் காண்க[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. தெளிந்த மொழியால் செவ்விதின் கிளந்து
    தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றின்
    புலன் என மொழிப புலன் உணர்ந்தோரே – தொல்காப்பியம், செய்யுளியல் 233
"https://ta.wikipedia.org/w/index.php?title=புலன்_(நூல்வனப்பு)&oldid=1141655" இலிருந்து மீள்விக்கப்பட்டது