பதினோராடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பதினோராடல் என்பது தமிழ் கடவுள்கள் ஆடிய பதினொன்று வகையான நடனங்களைக் குறிப்பதாகும்.[1] தெய்வம் பல்வேறு உருவம் கொண்டு ஆடியதாகச் சில கதைத்திற ஆட்டங்கள் குறிப்பிடப்படுகின்றன.[2] சிலப்பதிகாரம் மாதவி இப்பதினோரு வகையான ஆட்டங்களில் சிறந்து விளங்கியதாகக் கூறுகிறது.

தொகுப்புப் பட்டியல்[தொகு]

ஆடல் தெய்வம் இக்காலத்தில் ஆடப்படும் பாங்கு
கொடுகொட்டி சிவன் பறை முழக்கத்துடன் பல்வேறு உருவில் தோன்றி ஆடுதல் [3]
பாண்டரங்கம் சிவன் (முப்புரம் எரித்த) சாம்பலைப் பூசிக்கொண்டு ஆடுதல் [3]
பாவைக்கூத்து திருமகள் இக்காலப் பொம்மலாட்டம்
குடக்கூத்து திருமால் குடத்தை இடுப்பில் ஒன்றும் தலையில் ஒன்றும் வைத்துக்கொண்டு ஆடும் கரகாட்டம்
மல்லாடல் திருமால் மற்போர்
ஆனந்த தாண்டவம் (அல்லியம் (மதம்)) கண்ணன் அல்லிக்கொடி போல் அசைந்தாடும் பரதநாட்டியம்
குடைக்கூத்து முருகன் காவடி
துடியாடல் முருகன் உடுக்கை
கடையம் (ஆடல்) இந்திராணி (அயிராவத யாணை தெய்வாணை) உழத்தியர் ஆட்டம்
மரக்காலாட்டம் துர்க்கை பொய்க்கால் குதிரை ஆட்டம் போல, ஆனால், குதிரை இல்லாமல் ஆடல்
பேடிக்கூத்து காமன் காமன்-ரதி காமாண்டி ஆட்டம்

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. முனைவர். தமிழப்பன் எழுதிய ”தமிழ் இலக்கியத்தில் எண்ணும் எழுத்தும்” நூலின் பின் இணைப்புப் பகுதியில் பக்கம் 13-இல் உள்ள சா. கணேசன் எழுதிய பல்தொகை விவரம்.
  2. சூடாமணி நிகண்டு, ஒன்பதாவது செயல்பற்றிய பெயர்த்தொகுதி, பாடல் 50, 51
  3. 3.0 3.1 கலித்தொகை - கடவுள் வாழ்த்து

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பதினோராடல்&oldid=3898028" இலிருந்து மீள்விக்கப்பட்டது