ஞா. குகநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஞானசுந்தரம் குகநாதன் ஓர் ஊடகவியலாளர், உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர். இலங்கை இராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்த யாழில் 2006 - 2010 ஆண்டுக் காலப் பகுதியில் அவர் தனது உயிருக்கு அஞ்சி உதயன் அலுவலகத்திலேயே வாழ்ந்தார். பின்னர் அரசின் உறுதிமொழிகளைத் தொடர்ந்து தனது குடும்பத்துடன் சென்று வாழ்ந்தார்.[1] 2011 சூலையில் அவர் மிக மோசமாக தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Uthayan news editor brutally attacked
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞா._குகநாதன்&oldid=3174930" இலிருந்து மீள்விக்கப்பட்டது