செங்கம் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செங்கம் வட்டம் , தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக செங்கம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 5 குறுவட்டங்களும், 121 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2] 2012-இல் இவ்வட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு சமுனாமரத்தூர் வட்டம் நிறுவப்பட்டது.

இவ்வட்டத்தில் செங்கம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை 280,581 ஆகும். அதில் 140,861 ஆண்களும், 139720 பெண்களும் உள்ளனர். 66,734 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 86.5% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். [[1]]. இவ்வட்டத்தின் எழுத்தறிவு 68.33% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 974 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 34710 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 890 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 92,128 மற்றும் 17,046 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 94.46%%, இசுலாமியர்கள் 3.54%%, கிறித்தவர்கள் 1.87% சமணர்கள் 0. 02% மற்றும் பிறர் 0.11% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்கம்_வட்டம்&oldid=3084887" இலிருந்து மீள்விக்கப்பட்டது