திருச்செங்காட்டங்குடி உத்தராபதீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவாரம் பாடல் பெற்ற
திருச்செங்காட்டங்குடி உத்தராபதீசுவரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):மந்திரபுரீசம், சக்திபுரீசம், இந்திரபுரீசம், ஆத்திவனம், பாஸ்கரபுரீசம், திருச்செங்காட்டங்குடி
பெயர்:திருச்செங்காட்டங்குடி உத்தராபதீசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:திருச்செங்காட்டங்குடி
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:உத்தராபதீசுவரர், ஆத்திவன நாதர், மந்திரபுரீசுவரர், பிரமபுரீசுவரர், பாஸ்கரபுரீசுவரர்
தாயார்:சூளிகாம்பாள், திருக்குழலம்மை
தல விருட்சம்:ஆத்தி
தீர்த்தம்:ஒன்பது தீர்த்தங்கள்: சத்திய, சூரிய, அக்கினி, சந்திர, இந்திர, இயம, வருண, வாயு, சீராள தீர்த்தங்கள்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர்

திருச்செங்காட்டங்குடி உத்தராபதீசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 79ஆவது சிவத்தலமாகும்.

அமைவிடம்[தொகு]

சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் வட்டத்தில் அமைந்துள்ளது.

பிற சிறப்புகள்[தொகு]

இத்தலத்தில் பிள்ளையார் , கயமுகாசுரனைக் கொன்ற பழிதீர , வழிபட்டார் என்பதும், இறைவன் , சிறுத்தொண்டரிடம் பிள்ளைக்கறியமுது கேட்டு அருள்புரிந்த தலமென்பதும் தொன்நம்பிக்கை. [1] சிறுத்தொண்ட நாயனார் வாழ்ந்த மாளிகை இத்திருக்கோயிலையடுத்து கோயிலாக உள்ளது.

ஆதாரம்[தொகு]

  1. "தமிழ்நாடுஅரசு நாகப்பட்டினம் மாவட்ட இணையதளம்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2013-09-13.

வெளி இணைப்புகள்[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

படத்தொகுப்பு[தொகு]