பனைமரத்துப்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பனைமரத்துப்பட்டி
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சேலம்
வட்டம் சேலம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் செ . கார்மேகம், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 8,051 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

பனைமரத்துப்பட்டி அல்லது பனமரத்துப்பட்டி (ஆங்கிலம்:Panaimarathupatti), என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் சேலம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரில் பனைமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்குகிறது.

அமைவிடம்[தொகு]

பனைமரத்துப்பட்டி பேரூராட்சிக்கு வடக்கில் சேலம் 12 கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் தெற்கில் ஆத்தூர் 60 கி.மீ. தொலைவிலும்; தெற்கில் நாமக்கல் 50 கி.மீ.; மேற்கில் மேட்டூர் 50 கி.மீ. தொலைவிலும் உள்ளன.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

12 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 33 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி வீரபாண்டி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [4]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,468 குடும்பங்களும், 9,368 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 75.17% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 996 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. பனைமரத்துப்பட்டி பேரூராட்சியின் இணையதளம்
  5. Panaimarathupatti Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனைமரத்துப்பட்டி&oldid=3001747" இலிருந்து மீள்விக்கப்பட்டது