காவிரிப்பூம்பட்டினம் தமிழ்வளர் மன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாண்டியன் நெடுஞ்செழியன் அவையில் மாங்குடி மருதன் தலைமையில் புலவர்கள் கூடித் தமிழ் பாடியது போலவே காவிரிப்பூம்பட்டினத்திலும், வஞ்சிமாநகரிலும் தமிழ் வளர்க்கும் மன்றங்கள் இருந்தன.

பட்டினப்பாலை குறிப்பு[தொகு]

"புகழ் நிலைஇய மொழி வளர
அறம் நிலைஇய அகன் அட்டில்
சோறு வாக்கிய பெருங்கஞ்சி
யாறு போலப் பரந்து ஒழுகி" (அடி 42-45)

இந்தப் பாடலடிகளில் மொழி வளர்ச்சிக்காக உணவு படைத்த அட்டில்சாலை (மடம், மடப்பள்ளி) காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்தது குறிப்பிடப்பட்டுள்ளது.