செ. சந்தனசாமி
செ. சந்தனசாமி (பிறப்பு: 1927) மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் இதழாசிரியராகப் பணியாற்றி வருகின்றார். எழுத்துறையில் இவர் 'வேதியர்' எனும் புனைப் பெயரால் அறிமுகமாகியுள்ளார்.
எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]
1972 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். வானொலி நாடகங்கள், மேடை நாடகங்கள், கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன.
நூல்கள்[தொகு]
- "அன்புக் கனி"
- "கவிதைக் கனிகள்"
- "தியாக உள்ளம்"
- "உறவு மலர்ந்தது"
உசாத்துணை[தொகு]
- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் செ. சந்தனசாமி பக்கம் பரணிடப்பட்டது 2012-01-18 at the வந்தவழி இயந்திரம்